- இரா.மும்தாஜ் பேகம்
வீட்டில் வளர்த்த மாடு செத்தா கூட ஊரு சனமே போய் விசாரிச்சுட்டு வந்தது ஒரு காலம்...
இப்போ மனுஷன் செத்தாக்கூட விசாரிக்க ஆள் இல்லா சூழ்நிலைதான் அதிகமாக உள்ளது...!!
செருப்பாக உழைத்தாலும் சேமித்து வைக்கப் பழகுங்கள் ....
வாழ்க்கை அறுந்தால் தைப்பதற்கு நிச்சயம் உதவும்...!!
நேர்த்தியான குற்றங்கள் ஒரு போதும் குற்ற உணர்வுகளை கொண்டு வருவதில்லை ....
எலிக்கு விஷம் வைத்துக் கொல்வதைப் போல...!!

உச்சந்தலையில் இருந்தால் சிகை என்று
சிங்காரம் செய்வதும்....
உதிர்ந்து விழுந்தால்
மயிரு என்று மட்டமாக
பேசுவதும் மனிதர்களின் இயற்கை குணம்....!!
கஷ்டத்தின் அளவுக்கு ஏற்ப...
மனிதர்களிடம்
பக்தியின் அளவும் கூடுகிறது...!!
சூரிய கிரஹணம்
சந்திர கிரஹணம்
பிடிக்கும்....
விட்டு விடும்...
ஆனால் பணக் கிரஹணம் மட்டும் பிடித்தால் விடவே விடாது...!!
இறக்கும் போது
நமது பாவ, புண்ணியங்களின் கையிருப்பு
எதுவோ அதுதான்...
நமது தலைமுறையின் தலையெழுத்து...!!
விலங்குகளிடம் கூட பழக்கம் வைத்துக் கொள்ளலாம்...
ஆனால் சில மனிதர்களிடம் பழக்கம் வைத்துக் கொள்ளத்தான் பயமாக இருக்கிறது...!!
விபத்தில் தொண்ணூறு பேர் இறந்து பத்து பேர் காப்பாற்றப்பட்டால்.. அந்த பத்து பேரையும் கடவுள் காப்பாற்றி விட்டார் என்று சொல்லும் நாம்... இறந்த தொண்ணூறு பேரை கடவுள் ஏன் காப்பாற்றவில்லை என்று ஒரு போதும் கேட்பதில்லை...!!
திருமணம் செய்யும்போது சந்தோசமாக வாழ வேண்டும் என நினைக்கும்... ஆண்கள்... பெண்கள்...
திருமணத்திற்கு பின் தன் பிள்ளைகளின் சந்தோஷத்திற்காக வாழ்ந்தால் போதும் என மாறி விடுகிறார்கள்..!!
நமக்கு பிடித்தவர் சூழ்ச்சி செய்து வென்றால் கிருஷ்ணராக பார்ப்பதும் ...
நமக்கு பிடிக்காதவர் சூழ்ச்சி செய்து வென்றால் சகுனியாக பார்ப்பதும் மனிதனின் மாறாத குணங்களில் ஒன்று...!
திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை
இது தான் சட்ட ஒழுங்கு தரமா?...நாங்குநேரி படுகொலை...திமுக.,வை விளாசிய விஜய்
ராஜ்ய சபா எம்பி ஆகிறார் நிதின் நபீன்: பாஜகவின் இளம் தேசிய தலைவர் பீகாரிலிருந்து தேர்வு
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை
இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு...டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்தது என்ன?
திமுக - காங்கிரஸ் கூட்டணி: இழுபறிக்கு இடையில் இன்று முக்கிய அறிவிப்பு?
தடையினை உடைத்திடு
{{comments.comment}}