போர்ட் ஆர் ஸ்பெயின்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை சந்தித்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ஜோசுவா டா சில்வாவின் தாயார் கரோலின், அவரைக் கட்டிப்பிடித்து கண் கலங்கினார்.
இருவரும் பகிர்ந்து கொண்ட அந்த பாசமான நிமிடங்கள் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இந்தியா மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் டெஸ்ட்டை ஏற்கனவே இந்தியா வென்று விட்டது. தற்போது 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் விராட் கோலி அபாரமான சதம் அடித்து அசத்தியுள்ளார். இதை ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வரும் நிலையில் விராட் கோலியின் இன்னொரு பாசமான முகமும் வெளிப்பட்டு அதையும் ரசிகர்கள் டபுள் தமாகா"வாக கொண்டாடிக் கொண்டுள்ளனர்.
விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருக்கும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ஜோசுவாவுக்கும் இடையிலான பேச்சு விவரம், ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி அது வெளியானது. ஜோசுவா எந்த அளவுக்கு விராட் கோலி மீது அன்பும், மரியாதையும், பாசமும் கொண்டுள்ளார் என்பது மட்டுமல்லாமல் அவரது குடும்பமே விராட் கோலியின் ரசிகர்கள் என்பதும் தெரிய வந்தது.
ஜோசுவா விராட்டிடம் பேசும்போது, எனது தாயார் போட்டி முடிவில் உங்களைப் பார்த்துப் பேச வேண்டும் என்று ஆர்வமாக உள்ளார். மேலும் உங்களைப் பார்ப்பதற்காகவே ஸ்டேடியத்திற்கும் வருவதாக கூறியுள்ளார். எனது தாயார் உங்களது மிகப் பெரிய ரசிகர் என்று கூறினார். இதைக் கேட்டு விராட் கோலி ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
சொன்னது போலவே ஜோசுசவாவின் தாயார் கரோலின் ஸ்டேடியம் வந்திருந்தார். விராட் கோலி சதம் அடித்ததையும் அவர் பார்த்து ரசித்தார். இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 121 ரன்களைக் குவித்தார். ஆட்டம் முடிந்து வீரர்கள் வெளியே வந்தபோது அங்கு விராட் கோலியைச் சந்திக்க கரோலின் காத்திருந்தார். டீம் பஸ்ஸில் ஏற விராட் கோலி வந்தபோது கரோலின் இருந்ததைப் பார்த்து அவரிடம் வேகமாக வந்து கை குலுக்கினார் கோலி. அவரை கரோலின் பாசத்துடன் கட்டி அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார். மிகவும் உருக்கமாக இருந்தது அந்த சந்திப்பு. இருவரும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். கரோலின் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் கரோலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, விராட் கோலி நமது காலத்தின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். அவரை சந்தித்தது எனக்கு பெருமையாகவும், கெளரவமாகவும் உள்ளது. நான் விராட் கோலியின் மிகப் பெரிய ரசிகை. விராட் கோலி விளையாடும் அதே மைதானத்தில் எனது மகனும் இருக்கிறான் என்பதை பெருமையாக கருதுகிறேன் என்றார் அவர்.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}