டெல்லி: நாசா விண்வெளி நிறுவனம் சார்பில், இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அடுத்த ஆண்டு இறுதியில், சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று நாசா நிறுவன தலைவர் பில் நெல்சன் கூறியுள்ளார். அது பிரதமர் நரேந்திர மோடியாக இருக்கலாமா என்று அவரிடமே செய்தியாளர்கள் கேட்டபோது, ஏன் கூடாது என்று பதிலளித்துள்ளார் நெல்சன்.
அமெரிக்காவின் நாசா அமைப்பின் தலைவர் பில் நெல்சன் டெல்லிக்கு வந்துள்ளார். அவர் என்டிடிவிக்கு அளித்த ஒரு பேட்டியில்தான் நரேந்திர மோடி விண்வெளி வீரராக செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்சன் கூறுகையில், அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியர் ஒருவரை தேர்வு செய்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைப்போம் என்றார். அப்போது செய்தியாளர், பிரதமர் நரேந்திர மோடியால் விண்வெளி வீரராக செல்ல முடியுமா என்று கேட்டபோது, ஏன் முடியாது.. விண்வெளி மீதான ஆர்வம் கொண்டவர்தான் பிரதமர் மோடி. நானே அரசியல்வாதியாக இருந்தபோது விண்வெளி வீரராக சென்றவன்தான்.
\எந்த ஒரு அரசியல்வாதிக்கும் விண்ணில் பயணம் செய்வது என்பது அருமையான அனுபவமாக இருக்கும். குறிப்பாக ஒரு நாட்டின் தலைவராக இருக்கும் ஒருவருக்கு நிச்சயம் அந்த விருப்பம் இருக்கவே செய்யும். விண்வெளியிலிருந்து பார்த்தால் எதற்குமே எல்லையே கிடையாது. அங்கு அரசியல் கிடையாது, மதங்கள் கிடையாது, இனப்பாகுபாடு கிடையாது.. பூமியின் குடிமகன் மட்டுமே அங்கு தெரிவார்.
நிலவில் மனிதர்கள் வசிக்கும் சாத்தியக் கூறுகள் குறித்த ஆர்டிமிஸ் திட்டத்தில் இந்தியா ஆக்கப்பூர்வமாக பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு தயாராக முடியும் என்றார் அவர்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}