கார் வாங்க போறீங்களா.. பார்க்கிங் செய்ய இடம் இருக்கா?.. சென்னையில் போக்குவரத்து ஆணையம் அதிரடி!

Mar 12, 2025,06:44 PM IST

சென்னை: இனி கார் வாங்குபவர்கள் பார்க்கின் இடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கார் இருந்தால் தான் கெத்து என்ற மனநிலையில் பலரும் பெருமைக்காக கார் வாங்குகின்றனர். முன்பெல்லாம் வீட்டிற்கு ஒரு கார்கள் வாங்கும் காலம் மலையேறிப் போய் தற்போது தனி நபர்கள் உபயோகத்திற்காக தனித்தனி கார்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், ஒரு வீட்டில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று கார்கள்  வரை வைத்துள்ளனர். இப்படி அதிகமாக கார் வைத்துள்ளதால், சென்னையில் மொத்தம் எவ்வளவு கார்கள் இருக்கிறது என்பதை தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.




அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு  கார் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கணக்கீடு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் 92 லட்சம் கார்கள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 


இதில், 14,000 கார்கள் மட்டுமே பொதுப் பார்க்கிங்கில் நிறுத்த இட வசதி உள்ளது. மற்ற கார்கள் அனைத்தும் இடவசதி இல்லாத காரணத்தால் சாலைகளிலும் தெருக்களிலும் நிறுத்தி வைக்கின்றனர். இதன் காரணமாக சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப வாகனம் பெருக்கமும் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. 


இந்த நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த  போக்குவரத்து ஆணையம் ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது. அதாவது கார் வாங்குவோர் பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்றுகளை  கட்டாயமாக இணைக்க வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

news

ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்

news

சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை

news

டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!

news

பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!

news

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

news

துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்