சென்னை: இனி கார் வாங்குபவர்கள் பார்க்கின் இடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கார் இருந்தால் தான் கெத்து என்ற மனநிலையில் பலரும் பெருமைக்காக கார் வாங்குகின்றனர். முன்பெல்லாம் வீட்டிற்கு ஒரு கார்கள் வாங்கும் காலம் மலையேறிப் போய் தற்போது தனி நபர்கள் உபயோகத்திற்காக தனித்தனி கார்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், ஒரு வீட்டில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று கார்கள் வரை வைத்துள்ளனர். இப்படி அதிகமாக கார் வைத்துள்ளதால், சென்னையில் மொத்தம் எவ்வளவு கார்கள் இருக்கிறது என்பதை தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு கார் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கணக்கீடு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் 92 லட்சம் கார்கள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதில், 14,000 கார்கள் மட்டுமே பொதுப் பார்க்கிங்கில் நிறுத்த இட வசதி உள்ளது. மற்ற கார்கள் அனைத்தும் இடவசதி இல்லாத காரணத்தால் சாலைகளிலும் தெருக்களிலும் நிறுத்தி வைக்கின்றனர். இதன் காரணமாக சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப வாகனம் பெருக்கமும் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து ஆணையம் ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது. அதாவது கார் வாங்குவோர் பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்றுகளை கட்டாயமாக இணைக்க வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரம்.. மதுரை ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து.. உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}