சென்னை: தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் பரவலாக மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இரவு 7 மணி வரையிலான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, தேனி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!
{{comments.comment}}