சென்னை: தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் பரவலாக மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இரவு 7 மணி வரையிலான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, தேனி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி போராட்டம் எதிரொலி.. பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்
என் மகன் சாதித்து விட்டார்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித்தின் தாயார் பெருமிதம்
நான் யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்.. என்னைக் குறை கூறுவது நியாயமா.. சோனம் வாங்சுக்
இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.. நடிகை ஜோதிகா பரபரப்பு பதிவு
அனாதைகள் யாருடைய குழந்தைகள்???
நன்றொன்று உண்டென்று
சிறிதாய் இருந்தது பெரிதாகி விட்டது.. வீடு காலி!
பணத்தை வென்ற பாசம்!
{{comments.comment}}