- சசிகலா விஸ்வநாதன்
அலைபேசி சிணுங்க; கணவர் காசிநாதனின் முறைப்பை அலட்சியம் செய்த ஒப்பனையம்மா; ஓடோடிச் சென்று அலைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தாள்.
"ஏம்மா! ரெண்டு தரக்கா " ஃபோன் போட்டுருக்கே! அங்கிட்டு எல்லாரும் நல்லா தானே இருக்கீங்க" என்று கேட்டவனின் பேச்சை பாதியில் மறித்தாள்; ஒப்பனையம்மா.
இல்லேடா! குமரா! ஏது கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய், கணக்கிலே வரவு வெச்சுருக்காங்க பாங்க் பொஸ்தகத்துலே. கூடுதலாக பணம் அனுப்பி யிருக்கியா? சந்தோசம்" என்று மகிழ்ச்சியுடன் சொன்ன அம்மாவுக்கு, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு கீழே போய்க்கொண்டு இருப்பதை எப்படி விளக்குவது; என்று தெரியாமல் , விழித்தான் பாஸ்டனில் வேலை பார்க்கும் குமரன்.

சடாட்சரம், ஓப்பனையம்மாவின் அறியாமை கண்டு தலையில் அடித்துக் கொண்டு, "அவளுக்கு பத்து வாட்டி விளக்கியாச்சு. விடு; அத்தோடு. சந்தோச பட்டு கிடட்டும்" என்றார் மகனிடம்.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}