- சசிகலா விஸ்வநாதன்
அலைபேசி சிணுங்க; கணவர் காசிநாதனின் முறைப்பை அலட்சியம் செய்த ஒப்பனையம்மா; ஓடோடிச் சென்று அலைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தாள்.
"ஏம்மா! ரெண்டு தரக்கா " ஃபோன் போட்டுருக்கே! அங்கிட்டு எல்லாரும் நல்லா தானே இருக்கீங்க" என்று கேட்டவனின் பேச்சை பாதியில் மறித்தாள்; ஒப்பனையம்மா.
இல்லேடா! குமரா! ஏது கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய், கணக்கிலே வரவு வெச்சுருக்காங்க பாங்க் பொஸ்தகத்துலே. கூடுதலாக பணம் அனுப்பி யிருக்கியா? சந்தோசம்" என்று மகிழ்ச்சியுடன் சொன்ன அம்மாவுக்கு, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு கீழே போய்க்கொண்டு இருப்பதை எப்படி விளக்குவது; என்று தெரியாமல் , விழித்தான் பாஸ்டனில் வேலை பார்க்கும் குமரன்.

சடாட்சரம், ஓப்பனையம்மாவின் அறியாமை கண்டு தலையில் அடித்துக் கொண்டு, "அவளுக்கு பத்து வாட்டி விளக்கியாச்சு. விடு; அத்தோடு. சந்தோச பட்டு கிடட்டும்" என்றார் மகனிடம்.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்
சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்
எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!
இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!
சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!
நீலத்திரைக்கடலோரம்!
{{comments.comment}}