நாங்க பேசுறத காட்டுறதே இல்ல...ஈபிஎஸ் குற்றச்சாட்டால் வந்த அதிரடி உத்தரவு

Apr 12, 2023,11:39 AM IST
சென்னை : சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பேசுவது மற்றும் அவர்கள் கொண்டு வரும் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்த பேச்சுக்கள் நேரலையில் காட்டப்படுவதில்லை என அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு உரையை நேரலை செய்வதில் உள்நோக்கத்துடன் திமுக அரசு செயல்படுவதாகவும், குறிப்பாக தான் பேசுவது காட்டப்படுவதே இல்லை என்றும் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சி தலைவரின் இந்த குற்றச்சாட்டிற்கு சட்டசபை சபாநாயகர் அப்பாவு சபையில் விளக்கம் அளித்தார். அதில், நேரலை வழங்குவதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என அவர் தெரிவித்தார். மேலும், சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் அனைத்தும் இனி நேரலை செய்யப்படும் என தெரிவித்தார்.
 


பேரவையி நடுநிலையாக செயல்படுவதில்லை. சபாநாயகர் ஆளுங்கட்சியின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படுகிறார். சிறுமிக்கு ஏற்பட்ட நிலை பற்றி சட்டசபையில் நசன் பேசியதை நேரலையில் ஒளிபரப்பவில்லை. முதல்வர் அளித்த பதில், எனக்கு முன்பு பேசியவர்கள், எனக்கு பின்பு பேசியவர்களின் பேச்சுக்கள் நேரலையில் ஒளிபரப்பாகிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். 

நேரலை பேச்சுக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து அவையில் விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, கவன ஈர்ப்பு தீர்மானங்கள் உள்ளிட்ட அனைத்து பேச்சுக்களும் நேரலை செய்யப்படும் என உறுதி அளித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

news

Short Story: ஒரு பெரிய கெடா பூனை!

news

முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!

news

மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்