பிரிட்டன் மன்னராக முடிசூட்டப்பட்டார் 3 ம் சார்லஸ்.. .உலகமே வியந்த பிரம்மாண்ட விழா

May 06, 2023,04:53 PM IST
லண்டன் : பிரிட்டன் மன்னராக 3 ம் சார்லஸ் முடிசூட்டிக் கொண்ட விழா இன்று நடைபெற்றது. இங்கிலாந்து பிரதமர் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.  பாரம்பரியம் மிக்க பகிம்ஹம் அரண்மனையில் இந்த பிரமாண்ட விழா நடைபெற்றது.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் முடிசூட்டு விழா நடைபெற்றது. பிரிட்டன் மன்னரின் முடிசூட்டு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இளவரசர் ஹாரியும் அவரது மனைவியும் இந்த விழாவில் கலந்து கொண்டார். இந்திய அரசு சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். இந்த விழாவில் 2000 க்கும் அதிகமானவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 



பிரிட்டனில் கிட்டதட்ட 70 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மிக ஆடம்பரமான விழா இது தான். இந்த விழாவை பிரிட்டன் நகர வீதிகளில் அங்குள்ள மக்களும், உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் டிவிகளிலும் பார்த்து மகிழந்தனர். இதற்கு முன் இளவரசி டயானா - சார்லசின் திருமணம், டயானாவின் இறுதி ஊர்வலம் ஆகியவற்றையே இவ்வளவு அதிகமானவர்கள் பிரிட்டனில் இருந்து ஒளிபரப்பான நேரடி நிகழ்வினை கண்டு ரசித்தனர்.  

பிரிட்டன் மன்னராக 3 ம் சார்லசும், பிரிட்டன் ராணியாக காமிலாவும் முடிசூட்டிக் கொண்ட இந்த விழாவில் அரசு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். இரண்டாம் எலிசபெத் மரணம், இளவரசர் ஹாரியும் அவரது மனைவியும் அரசு குடும்பத்தையும் அரண்மனையையும் விட்டு விலகி இருப்பது போன்ற அரசு குடும்பத்தில் சமீபத்தில் நடந்த பல மாற்றங்களால் 70 வயதில் பிரிட்டனின் மன்னராக 3ம் சார்லசிற்கு முடிசூட்ட முடிவு செய்யப்பட்டது. 70 வயதில் முடிசூட்டிக் கொள்வது அரசு குடும்பத்தில் ஒன்றும் புதிதல்ல. இரண்டாம் எலிசபெத்தும் தனது 70 வது வயதில் தான் ராணியாக முடிசூடினார்.

அரண்மனையை விட்டு வெளியேறினாலும் இளவரசர் ஹாரி, தனது தந்தையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. அவரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக அனைவரையும் வியக்க வைத்து, கவனத்தை ஈர்த்துள்ளது.



முன்னதாக உலக நாடுகளின் தலைவர்கள் வரிசையாக சர்ச்சுக்கு அணிவகுத்து வந்தனர். அதைத் தொர்ந்து மன்னர் சார்லஸ், ராணி கமீலா ஆகியோர் அழைத்து வரப்பட்டனர். பின்னர் பைபிள் மீது சார்லஸ் உறுதிமொழி ஏற்றார். அப்போது, உறுதிமொழி அளித்த அனைத்தையும் நான் நிச்சயம் கடைப்பிடிப்பேன், நிறைவேற்றுவேன். அதற்கு எனக்கு உதவு கடவுளே என்று கூறி பைபிளை முத்தமிட்டார்.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசினார். தொடர்ந்து பாடல்கள் பாடப்பட்டன. அதன் பின்னர் மன்னரின் சாதாரண உடை அகற்றப்பட்டு தங்க அங்கி அணியப்பட்டது. தொடர்ந்து சார்லஸிடம் வீர வாள் ஒப்படைக்கப்பட்டது. இறுதியாக செங்கோலை கையில் தாங்கிப் பிடித்த நிலையில், 3ம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக முடி சூட்டப்பட்டார். அவருக்கு எட்வர்ட் கிரீடம் சூட்டப்பட்டது.


சமீபத்திய செய்திகள்

news

வேரின் விசேஷம்!

news

படு சூடாகி வரும் உலகம்.. என்னெல்லாம் ஆபத்து காத்திருக்கு தெரியுமா?

news

விஜய் கட்சி ஆபத்துல இருக்கு... அதனால தான் விசில் அடிக்கிறாங்க: ஜெயக்குமார் பேட்டி

news

தந்தையின் உடல்நிலை சரியில்லை... பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை

news

தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழுவிபரம்!

news

இயற்கையின் சமநிலை.. இறைவனின் கணக்கு.. இதைப் புரிந்து கொள் மனிதனே!

news

தென்றல் தவழும்.. தமிழ் நாயகன் முருகனின்.. திருமலை திருக்கோவில்!

news

பாக்.கை ஐசிசியால் தண்டிக்க முடியாது.. சொல்கிறார் மணி.. ஆனால் தடைக்கு வாய்ப்பிருக்கு!

news

தமிழ்நாடு உள்ளவரை நீ உயிரோடு இருக்கிறாய்...அறிஞர் அண்ணா நினைவு நாளில் வைரமுத்து உருக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்