ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!

Jul 25, 2025,11:01 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஆடி வெள்ளி சிறப்புகள்: விசுவாவசு வருடம் 20 25 ஜூலை 25ஆம் தேதி ஆடி மாதம் ஒன்பதாம் நாள் ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை. இந்த ஆண்டு ஆடி மாதம் 5 வெள்ளிக்கிழமைகள் வருகிறது .முதல் வெள்ளி ஜூலை பதினெட்டாம் தேதி சிறப்பாக நிறைவடைந்தது தொடர்ந்து, இரண்டாம் வெள்ளி ஜூலை 25, மூன்றாம் வெள்ளி ஆகஸ்ட் 1 ,நான்காம் வெள்ளி ஆகஸ்ட் 8 ,ஐந்தாம் வெள்ளி ஆகஸ்ட் 15 ஆகிய நாட்களில் வருகிறது.


இரண்டாவது ஆடி வெள்ளிக்கிழமையான இன்று அம்பிகையை மங்க  மங்கள கௌரி ஆக பாவித்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். மூன்றாவது வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு  தளிகை வழிபாடு செய்வார்கள். தளிகை என்பது கலவை சாதம் சமைத்து வழிபாடு செய்வது ஆகும் .அதாவது சர்க்கரை பொங்கல், புளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சம் பழ சாதம், கறிவேப்பிலை சாதம் என ஐந்து வகை சாதங்களை சமைத்து தளிகை செய்வது சிறப்பு .இதனை ஐந்தாவது வாரம் வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம் .நான்காவது வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி நோன்பு வருவது மிகவும் சிறப்பு. கடைசி வெள்ளி ஆகஸ்ட் 15ஆம் தேதி வருகிறது.




ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனை வழிபட்டு பூஜை செய்வது சிறப்பு .சப்த கன்னிகள், குலதெய்வம், முப்பெரும் தேவியர் என அனைத்து பெண் தெய்வங்களையும் வழிபடுவது சிறந்த பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பக்தர்களை காப்பதற்காகவே அவதாரம் எடுத்த துர்கா தேவியை வழிபடுவதற்கு இம்மாதம் சிறந்தது.


இவ்வாறு வழிபாடு செய்வதினால் வாழ்க்கையில் இருக்கும் துக்கங்கள் ,துயரங்கள் அனைத்தையும் அம்பாள் அழித்து நல்வாழ்வு நல்குவாள் .மேலும் திருமணம் ஆகாதவர்களுக்கு ஆடி வெள்ளி வழிபாடு செய்வதினால் திருமணம் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடலில் உள்ள நோய்கள் தீரும். நாம் செய்யும் வழிபாடுகளின் மூலம் அம்மன் மனம் குளிர்ந்து நினைத்த காரியங்களை நிறைவேற்றி அருள்வாள்.




அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை நடைபெறும் .அதில் 108 மகளிர் அமர்ந்து குத்துவிளக்கு ஏற்றி, மலர்களால் அலங்கரித்து, மஞ்சள் பிள்ளையார் வைத்து ,வெற்றிலை பாக்கு ,வாழைப்பழம் வளையல், நெய்வேத்தியம் வைத்து 108 மகாலட்சுமி தாயாரின் அஷ்டோத்திரம் படித்து ,குங்குமத்தினால் அர்ச்சனை செய்து வழிபாடுகள் நடைபெறும். இந்த விளக்கு பூஜையில் கலந்து கொண்டு கன்னிப்பெண்கள், சுமங்கலி பெண்கள் வழிபடுவது அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.


தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் ஆடி வெள்ளிக்கிழமை நல்வாழ்த்துக்கள். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.  வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்