அதிமுக.,வில் திக்...திக்...இபிஎஸ்.,க்கு 80 பேர் ஆதரவு...அடுத்து என்ன நடக்கும்?

May 19, 2026,06:26 PM IST

சென்னை : அதிமுக.,வில் அடுத்து என்ன நடக்கும் என்ற எண்ணம் கட்சி  தொண்டர்களிடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல் களமும் எதிர்பார்த்து கவனித்துகு் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 80 மாவட்ட செயலாளர்கள் ஆதரவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.


தமிழக சட்டசபை தேர்தலில் பெற்ற தோல்விக்கு பிறகு அதிமுக.,வில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி-சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. சட்டமன்றக் குழு தலைவர், கொறடா என்று ஆரம்பித்து அனைத்து கட்சி விவகாரங்களிலும் இரு அணிகள் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது. 


இதற்கிடையில் சட்டசபையில் தவெக அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, அவர்களுக்கு ஆதரவாக ஓட்டளித்தவர்கள் அனைவரின் கட்சி பதவிகளையும் பறித்து உத்தரவிட்டார், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.




மிகுந்த பரபரப்பான சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 80 பேர் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. 


தங்களிடம் தான் அதிக எண்ணிக்கையிலான மாவட்ட செயலாளர்கள் இருப்பதாக ெஸ்.பி.வேலுமணி தரப்பு சொல்லி வந்த நிலையில் இபிஎஸ்.,க்கு ஆதரவாக 80 மாவட்ட செயலாளர்கள் இருப்பதாக சொல்லப்படுவது கட்சியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பதவிக்காக சிலர் கட்சிக்கு துரோகம் செய்துள்ளனர். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். இக்கட்டான சூழலில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். கட்சியின் ஒற்றுமை தான் முக்கியம் என பேசி உள்ளார்.இதனால் அதிமுக.,வில் அடுத்து என்ன நடக்கும்? கட்சி யாருக்கு? யாருடைய கை ஓங்க போகிறது? என்ற குழப்பமும், கேள்விகளும் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

Chettinad Recipes: செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி சமையல்.. காரசாரமான பூண்டு ஊறுகாய்!

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

news

Nainar Nagendran: ஆளுநர் அர்லேகரை திடீரென சந்தித்த பாஜக நிர்வாகிகள்.. இது தான் விஷயமா?

news

CV Shanmugam: தவெக-வில் இணைகிறாரா சி.வி.சண்முகம்? ஆலோசனையில் பங்கேற்ற அந்த விஐபி!

news

Tamil Poem: இந்தத் துறவியின் வேஷம் கலைத்தேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்