சென்னை: அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அண்மையில் நடந்த தேர்தல் தோல்வி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு மற்றும் பாஜகவின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து அவர் விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
"மனசு நோகுதய்யா" - வேதனையுடன் விலகிய செம்மலை:
கட்சியில் இருந்து விலகியது குறித்துப் பேசிய செம்மலை, "கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா? மனசு நோகுதய்யா, மனசு நோகுதய்யா! புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம், புரட்சித்தலைவி ஜெயலலிதா காப்பாற்றிய இயக்கம்... இந்த இயக்கத்துக்கு இந்த கதியா?" என்று மிகுந்த மனவேதனையுடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தேர்தல் தோல்விக்கு இ.பி.எஸ் காரணமா?

கட்சியின் தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "அதிமுகவின் தோல்விக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் குற்றம் சாட்டுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த தேர்தலுக்காக அவர் மிகக் கடுமையாக உழைத்தார். இருப்பினும், நாம் வெற்றிக் கோட்டை எட்டாததற்கு ஏற்கனவே நம்முடைய கட்சியில் இருந்த குழப்பங்களே முக்கியக் காரணம்" என்று குறிப்பிட்டார்.
மேலும், "நம்முடைய இயக்கத்திலே நிலவிய பிளவுபட்ட சூழல் காரணமாகவே, அவரது கடுமையான முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கவில்லை. எனவே, இதற்காக அவரை மட்டும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்ட முடியாது. அவர் கட்சியைச் சிறப்பாகவே நடத்தி வருகிறார்" என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகப் பேசினார்.
பாஜக குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு:
எஸ்.பி. வேலுமணிக்கு பின்னால் இருந்து கொண்டு பாஜகதான் அதிமுகவை இயக்குகிறது என்ற பரவலான குற்றச்சாட்டை செம்மலை முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "எஸ்.பி.வேலுமணிக்கு பின்னால் இருந்து கொண்டு பாஜக இயக்குகிறது என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதேபோல், எஸ்.பி. வேலுமணி பாஜகவிற்கு நெருக்கமானவர் என்பதையும் நான் மறுக்கிறேன். இந்த விஷயத்தில் பாஜக சித்து விளையாட்டு விளையாடுகிறது என்பதையெல்லாம் ஏற்க முடியாது; அவர்களுக்கு அதெல்லாம் வேலையும் இல்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
அதிமுகவின் பிளவு மற்றும் உட்கட்சி குழப்பங்கள் காரணமாகவே கட்சி இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள செம்மலையின் இந்த விலகல் முடிவு, அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் அரசியல் தளத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்
21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
Short Story: ரிசர்வ் பெட்டியில் ஒரு அன்ரிசர்வ் கலாட்டா!
Travel story: சொகுசுக் கப்பலின் மொட்டை மாடியில் அமாவாசை தர்ப்பணம்.. அசந்து போன அமெரிக்கர்!
விநாயகர் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி.. ஆவணி மாத சிறப்புகள்!
கடந்த காலத்தின் பசுமை நினைவுகள்
வளர்ந்து வரும் சகிப்புத்தன்மையும் அமைதிப் பேணலும்!
Tamil Short Story: தந்தையாகிய தமையன்!
கோடைக்கால மேகம்
{{comments.comment}}