சென்னை: இந்த ஆட்சியில் பெண்ளுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஒட்டு மொத்தமாக இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. யாரை காப்பாற்றுவதற்காக இந்த அரசாங்கம் முயற்சி செய்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி பேசுகையில், மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பது தான் கட்சி. மக்களுக்கு பிரச்சனை ஏற்படும் பொழுது, அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பது தான் ஒவ்வொரு கட்சியினுடைய நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் அண்ணா திமுக இருக்கிறது. பல கட்சிகளும் அந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அதனை அதிமுக வரவேற்கிறது. பிரேக்கில்லாத வட்டி போல இந்த ஆட்சி போய் கொண்டிருக்கிறது.

2024ம் ஆண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு அமைந்த ஆண்டாக உள்ளது. நாளை 2025ம் ஆண்டு பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள ஆண்டாக மலர இறைவனை பிரார்த்திக்கின்றேன். கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம் திமுகவின் திட்டம் இல்லை. நான் முன்மொழிந்த கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
பொள்ளாச்சி சம்பவத்தில் எப்படியெல்லாம் ஆர்பாட்டம் செய்தார்கள். அண்ணா பல்கலை சம்பவத்தில் இவர்களுக்கு வேண்டப்பட்டவர் இருப்பதால் தான் அமைதி காக்கிறார்கள். இந்த ஆட்சியில் பெண்ளுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஒட்டு மொத்தமாக இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. யாரை காப்பாற்றுவதற்காக இந்த அரசாங்கம் முயற்சி செய்கிறது, காவல் துறையும் முயற்சி செய்கிறது.
நிச்சயமாக அண்ணா திமுக ஆட்சிக்கு வரும். அப்போது இவை எல்லாவற்றிற்கும் தீர்வு காணப்படும். சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படவில்லை. அண்ணா பல்கலைகழகத்தில் சிசிடிவி கேமிரா இயங்கவில்லை என்கின்றனர். அவ்வளவு பெரிய கல்லூரியில் சிசிடிவி கேமிரா இயங்க வில்லை என்றால், உண்மைக் குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்க முடியும். கேமிரா எந்த நிலையில் இருக்கிறது என்ற உண்மை கூட தற்போது மறைக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒன்றை சொல்லி மக்களை குழப்பி வருகின்றனர் என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?
விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!
Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?
{{comments.comment}}