பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை.. நாங்க ரொம்ப கிளியரா இருக்கோம்.. எடப்பாடிபழனிசாமி

Nov 13, 2024,05:43 PM IST

கோயம்பத்தூர்: பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருக்கின்றோம் என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கோவையில் இது குறித்து செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் கூறியதாவது:


தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். நாடாளுமன்ற தேர்தலின் போதே, சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதை எங்களது நிலைப்பாடு என்று சொல்லி விட்டேன். அதிமுக பற்றி சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.


அதிமுக திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது


அதிமுக ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல் தன்னை கொச்சைப்படுத்தி முதலமைச்சர் கடந்த சில நாட்களாக விமர்சிக்கிறார். அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். முதல்வர் தனது கட்சி நிர்வாகிகளுக்கு எழுதிய மடலில் நான் அவரைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசியதாக கூறியுள்ளார். நான் முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது என்னை பற்றி தனிப்பட்ட வகையில் பல விமர்சனங்களை செய்துள்ளார். தற்போது நடைபெற்ற கூட்டத்தில் கூட கரப்பான் பூச்சி எனக் கூறியுள்ளார். 




கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு மக்கள் வளர்ச்சி திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக பில்லூர் மூன்று கூட்டு குடிநீர் திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், உக்கடம் மேம்பாலம், ஐடி பூங்கா ஆகியவற்றிற்கு அதிமுக ஆட்சி காலத்தில் தான் அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், அத்திக்கடவு அவிநாசி இரண்டாம் கட்ட திட்டம், விமான நிலைய விரிவாக்க திட்டம், மேற்கு புறவழி சாலை திட்டம் என அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. சில திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அதிமுக ஆட்சி காலத்திலேயே 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றது.


முதல்வர் ஸ்டாலின் பதவி,  நிலை மறந்து செயல்படுகிறார்


அதிமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து உதயநிதியுடன் விவாதிப்பதற்கு எங்கள் கட்சியிலும் முன்னாள் அமைச்சர்கள் பலர் இருக்கின்றனர். முதல்வரிடம் கேள்வி கேட்டால் உதயநிதி ஏன் பதில் சொல்ல வேண்டும். அப்படி என்றால் திறமை இல்லாத பொம்மை முதல்வராக இருக்கிறார் என விமர்சிப்பது சரியானது தானே. பிற மாநிலங்களில் ஒரே ஒரு முதல்வர் இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் நான்கு முதல்வர்கள் உள்ளனர். அதிகாரம் மிக்கவர்களாக உள்ள அவர்கள் யார் என்று ஊடகங்களுக்கே தெரியும். 


முதல்வர் ஸ்டாலின் தனது பதவியையும் நிலையையும் மறந்து இதுபோன்ற விமர்சனங்களை செய்து வருகிறார். அதிமுக ஆட்சி காலத்தில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சிக்கிறார். ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட  திட்டங்களுக்கும் அமல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கும் தான் தற்போது திமுக ஆட்சிக் காலத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.


திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது. காவல்துறையினர் முழு சுதந்திரத்தோடு செயல்பட முடிவதில்லை. இதனால் போதைப் பொருள் பண்பாடு விற்பனை தயாரிப்பு என அனைத்தும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

news

மனிதம் மலர்கையில் .. (பகுதி 1)

news

என்னடா இது விசிலுக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து தடை செய்யப்படுவதால் சலசலப்பு!

news

தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? உயர்வா? குறைவா? இதோ முழு விபரம்!

news

இருந்தா மட்டும் போதும்.. I actually don't want anything from you!

news

அரசு விழாக்களில்.. தேசிய கீதத்திற்கு முன்பாக இனி வந்தே மாதரம் பாடப்பட வேண்டும்!

news

பிப்ரவரி 22-ம் தேதி முதல்.. தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கும்.. திமுக அறிவிப்பு

news

பகிரங்க கொலை மிரட்டல் .. தேமுதிக நிர்வாகியை கைது செய்ய பத்திரிகையாளர்கள் கோரிக்கை

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்