அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. Accused ஞானசேகரனுக்கு திடீர் வலிப்பு!

Jan 22, 2025,04:16 PM IST

சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீஸ் காவலில் இருந்த ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சென்னை அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய கோட்டூர்புரம் போலீஸார், ஞானசேகரன் என்ற நபரை கடந்த 25ம் தேதி கைது செய்தனர். ஞானசேகரன் போலீசாரிடம் இருந்த தப்ப முயன்ற போது கை, கால்களில் அவருக்கு முறிவு ஏற்பட்ட நிலையில் ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 




இந்த வழக்கை சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு விசாரித்து வருகிறது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த ஞானசேகரன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கின் எப்ஐஆர்  வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


அது மட்டும் இன்றி சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டார். 7 நாட்கள் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர்  எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரித்து வந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


ஞானசேகரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனையடுத்து அண்ணா நகர் துணை ஆணையர் சினேக பிரியா ஞானசேகரனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நேரில் சென்று கேட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்