இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

Jan 09, 2026,10:31 AM IST

சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் நொடிக்கு நொடி விறுவிறுப்படைந்து வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாட்களுக்கு முன் டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்த நிலையில் இன்று, பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் சென்று பேசி விட்டு வந்துள்ளார். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்று விட்டு வந்த நயினார் நாகேந்திரனிடம் இந்த சந்திப்பின் போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமான முறையில் நடந்து முடிந்தது. தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கிறேன். பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசனை செய்ததாகவும் தெரிவித்தார். 




பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 28ம் திதியன்று தமிழகம் வரவிருக்கிறார். பிரதமரின் தமிழக வருகையின் போது கன்னியாகுமரியில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பிரதமர் தமிழகம் வருவதற்கு முன்பாக தமிழகத்தில் என்டிஏ கூட்டணி முடிவாகி விட வேண்டும். கன்னியாகுமரியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒன்றாக மேடை ஏற்றி தங்களின் பலத்தை காட்ட வேண்டும் என பாஜக நினைக்கிறது.


இதன் முன்னோட்டமாக தான் இன்று நயினார் நாகேந்திரன், இபிஎஸ்.,ஐ சென்று சந்தித்திருப்பது என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கடலூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் அறிவிக்க உள்ளார். ஏற்கனவே அன்புமணி தரப்பு பாமக, அதிமுக கூட்டணிக்கு வந்து விட்டதால் விரைவில் டாக்டர் ராமதாஸ் தரப்பையும் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் அதிமுக, பாஜக கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்