துபாய்: பாகிஸ்தான் அணியை இந்தியா பிரமாதமாக வென்று விட்டாலும் கூட இறுதிப் போட்டிக்கு நாம் முன்னேற சில ரிஸ்க்குகள் இருக்கத்தான் செய்கின்றன. அதையும் நாம் தாண்டியாக வேண்டிய நிலை உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா இதுவரை தான் மோதிய 2 போட்டிகளிலும் வென்றுள்ளது. முதலில் வங்கதேசத்தை வீழ்த்தியது. நேற்று பாகிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தான் அணி தான் மோதிய 2 போட்டிகளிலும் தோற்றதால், தொடரை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டது.
இந்தியா அரை இறுதிக்குத் தற்போது தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் இதில் உறுதி இல்லை. காரணம் அடுத்தடுத்து நடக்கவுள்ள போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்து இதில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.
இந்தியா தற்போது 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்து இந்தியா, நியூசிலாந்து அணியைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதேபோல வங்கதேசம் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் (நியூசிலாந்து, பாகிஸ்தான்) உள்ளன. இதில் இந்தியா, நியூசிலாந்திடம் தோற்று, வங்கதேசம் தனது 2 போட்டிகளிலும் வென்றால், இந்தியா அரை இறுதிக்கு நுழைவது சிக்கலாகி விடும்.
காரணம் அப்படி நடந்தால் இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அதன் பிறகு நெட் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கான அணிகள் தேர்வாகும். இதெல்லாம் நடக்காமல் இருக்க இந்தியா, தனது கடைசிப் போட்டியில் நியூசிலாந்தை வென்று விட்டால் போதுமானது.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}