துபாய்: பாகிஸ்தான் அணியை இந்தியா பிரமாதமாக வென்று விட்டாலும் கூட இறுதிப் போட்டிக்கு நாம் முன்னேற சில ரிஸ்க்குகள் இருக்கத்தான் செய்கின்றன. அதையும் நாம் தாண்டியாக வேண்டிய நிலை உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா இதுவரை தான் மோதிய 2 போட்டிகளிலும் வென்றுள்ளது. முதலில் வங்கதேசத்தை வீழ்த்தியது. நேற்று பாகிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தான் அணி தான் மோதிய 2 போட்டிகளிலும் தோற்றதால், தொடரை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டது.
இந்தியா அரை இறுதிக்குத் தற்போது தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் இதில் உறுதி இல்லை. காரணம் அடுத்தடுத்து நடக்கவுள்ள போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்து இதில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.

இந்தியா தற்போது 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்து இந்தியா, நியூசிலாந்து அணியைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதேபோல வங்கதேசம் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் (நியூசிலாந்து, பாகிஸ்தான்) உள்ளன. இதில் இந்தியா, நியூசிலாந்திடம் தோற்று, வங்கதேசம் தனது 2 போட்டிகளிலும் வென்றால், இந்தியா அரை இறுதிக்கு நுழைவது சிக்கலாகி விடும்.
காரணம் அப்படி நடந்தால் இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அதன் பிறகு நெட் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கான அணிகள் தேர்வாகும். இதெல்லாம் நடக்காமல் இருக்க இந்தியா, தனது கடைசிப் போட்டியில் நியூசிலாந்தை வென்று விட்டால் போதுமானது.
பிப்ரவரி 28ம் தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி!
மௌனத்தின் பேரொலி!
பயமின்றி வாழ்வோம் – பெண்களின் பலமே சமூகத்தின் பலம்!
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைவு... எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 தேதி அறிவிப்பு தாமதமாக இது தான் காரணம்
தவெக தலைமை அறிவிப்பு: அனுமதி இன்றி ஊடக விவாதங்களில் பங்கேற்க நிர்வாகிகளுக்குத் தடை!
மனிதநேயத்தின் மறுவடிவம்.. கல்விக்காக உடலையே தானம் செய்த தலைவர் நல்லகண்ணு
தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக - காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தீவிரம்!
ஆசை மோகம் சுயநலத்தின் மீது பகை கொண்டு வாழ்ந்த.. இயற்பகை நாயனார்!
{{comments.comment}}