துபாய்: பாகிஸ்தான் அணியை இந்தியா பிரமாதமாக வென்று விட்டாலும் கூட இறுதிப் போட்டிக்கு நாம் முன்னேற சில ரிஸ்க்குகள் இருக்கத்தான் செய்கின்றன. அதையும் நாம் தாண்டியாக வேண்டிய நிலை உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா இதுவரை தான் மோதிய 2 போட்டிகளிலும் வென்றுள்ளது. முதலில் வங்கதேசத்தை வீழ்த்தியது. நேற்று பாகிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தான் அணி தான் மோதிய 2 போட்டிகளிலும் தோற்றதால், தொடரை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டது.
இந்தியா அரை இறுதிக்குத் தற்போது தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் இதில் உறுதி இல்லை. காரணம் அடுத்தடுத்து நடக்கவுள்ள போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்து இதில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.

இந்தியா தற்போது 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்து இந்தியா, நியூசிலாந்து அணியைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதேபோல வங்கதேசம் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் (நியூசிலாந்து, பாகிஸ்தான்) உள்ளன. இதில் இந்தியா, நியூசிலாந்திடம் தோற்று, வங்கதேசம் தனது 2 போட்டிகளிலும் வென்றால், இந்தியா அரை இறுதிக்கு நுழைவது சிக்கலாகி விடும்.
காரணம் அப்படி நடந்தால் இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அதன் பிறகு நெட் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கான அணிகள் தேர்வாகும். இதெல்லாம் நடக்காமல் இருக்க இந்தியா, தனது கடைசிப் போட்டியில் நியூசிலாந்தை வென்று விட்டால் போதுமானது.
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}