சென்னையில் விடிய விடிய மழை.. பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் குழப்பம்.. புறநகர் மாணவர்கள் பாதிப்பு

Nov 12, 2024,09:33 AM IST

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக  பல பகுதிகளில் நேற்று இரவிலிருந்து மழை பெய்து வருகிறது. இதில் சென்னை மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் புறநகர்ப் பகுதி  மாவட்டங்களில் விடுமுறை விடப்படாததால் மாணவ, மாணவியர்  நனைந்தபடி பள்ளி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


சென்னையில் நேற்று இரவே மழை தொடங்கி விட்டது. நகர்ப் பகுதிகளில் பரவலாக கன மழையும், மித மழையுமாக விடிய விடிய பெய்து வருகிறது. அதேபோல புறநகர்களிலும் மழை இருந்து வருகிறது. வட பகுதிகளில்தான் அதிக அளவிலான மழை பெய்துள்ளது. பெருங்குடியில்தான் அதிக அளவாக 7 .8 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. அதேபோல உத்தண்டி 5.1, சோழிங்கநல்லூர் 5 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. பெரிய அளவிலான மழையாக இல்லாவிட்டாலும் கூட தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஊரே ஊரக்காடாகியுள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், சுரங்கப் பாதைகள் எதிலும் தண்ணீர் தேங்கவில்லை.




மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம், புறநகர்களில் வரும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடுமுறை விடப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர் கஷ்டப்பட்டு நனைந்தபடி போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது பெற்றோர்களையும் புலம்ப வைத்தது. சென்னையைப் போலவே இங்கும் விடுமுறை அளித்திருக்கலாம் என்று அவர்கள் குமுறினர்.




சென்னை நகரில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமாகவும், சில இடங்களில் கன மழையாகவும் இது உள்ளதால் அலுவலகம் செல்வோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.  இதற்கிடையே இன்று முதல் ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அடுத்து வரும் நாட்கள் ஈர நாட்களாகவே இருக்கும்.


மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை மாநகராட்சியும், இதர துறைகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 தேர்தலுக்கு.. தவெக கேட்கப் போகும் சின்னம் என்னாவா இருக்கும்.. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

Roston Chase.. வெஸ்ட் இண்டீஸ் Test அணிக்கு புதிய கேப்டன்.. 2 வருட கேப்புக்குப் பிறகு விளையாடுகிறார்!

news

ஆபரேஷன் சிந்தூர் அதிரடி எதிரொலி.. பாதுகாப்புத்துறை பட்ஜெட் ரூ.50,000 கோடி அதிகரிக்க வாய்ப்பு

news

ஜூலை 4 முதல் 10ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெறும்: அரசுத் தேர்வுகள் இயக்கம்

news

இது வெறும் டிரெய்லர் தான்... ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

news

Maman movie: ஏண்டா தம்பிகளா, மண் சோறு சாப்பிட்டா எப்படிடா படம் ஓடும்.. நடிகர் சூரி ஆதங்கம்!

news

நிதி ஆயோக் கூட்டம்: மே 24 முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்!

news

ஆடு மாடுகளோடு நிம்மதியாக விவசாயம் பார்க்கிறேன்.. இப்படியே இருக்கப் போறேன்.. அண்ணாமலை

news

தமிழகத்தில்.. பள்ளிகள் திறப்பு எப்போது..? தேதி அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்