சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பல பகுதிகளில் நேற்று இரவிலிருந்து மழை பெய்து வருகிறது. இதில் சென்னை மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் புறநகர்ப் பகுதி மாவட்டங்களில் விடுமுறை விடப்படாததால் மாணவ, மாணவியர் நனைந்தபடி பள்ளி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவே மழை தொடங்கி விட்டது. நகர்ப் பகுதிகளில் பரவலாக கன மழையும், மித மழையுமாக விடிய விடிய பெய்து வருகிறது. அதேபோல புறநகர்களிலும் மழை இருந்து வருகிறது. வட பகுதிகளில்தான் அதிக அளவிலான மழை பெய்துள்ளது. பெருங்குடியில்தான் அதிக அளவாக 7 .8 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. அதேபோல உத்தண்டி 5.1, சோழிங்கநல்லூர் 5 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. பெரிய அளவிலான மழையாக இல்லாவிட்டாலும் கூட தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஊரே ஊரக்காடாகியுள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், சுரங்கப் பாதைகள் எதிலும் தண்ணீர் தேங்கவில்லை.
மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம், புறநகர்களில் வரும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடுமுறை விடப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர் கஷ்டப்பட்டு நனைந்தபடி போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது பெற்றோர்களையும் புலம்ப வைத்தது. சென்னையைப் போலவே இங்கும் விடுமுறை அளித்திருக்கலாம் என்று அவர்கள் குமுறினர்.
சென்னை நகரில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமாகவும், சில இடங்களில் கன மழையாகவும் இது உள்ளதால் அலுவலகம் செல்வோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கிடையே இன்று முதல் ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அடுத்து வரும் நாட்கள் ஈர நாட்களாகவே இருக்கும்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை மாநகராட்சியும், இதர துறைகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}