வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Jan 12, 2026,06:45 PM IST

சென்னை: வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை.  நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், உங்கள் வேர் தமிழ்நாட்டில் தான் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘அயலகத் தமிழர் தினம் - 2026 ’ விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் நிறைவு நாளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக இந்த விழா நடத்தப்படுகிறது. நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், உங்கள் வேர் தமிழ்நாட்டில் தான் உள்ளது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதுவர்கள்.




நாம் யாராலும் பிரிக்க முடியாத சொந்தங்கள், இது பல்லாண்டு கால சொந்தம். கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது. 70 நாடுகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தமிழர்கள் வந்திருக்கிறார்கள். நாம் அனைவரும் தமிழ் சொந்தங்கள், தமிழின சொந்தங்கள். வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை.


புலம்பெயர்ந்த தமிழர்களின் குறைகளைக் களையவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் இந்த வாரியம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு தற்போது தொழில்துறையில் மிகவேகமாக வளர்ந்து வருகிறது. 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய அயலகத் தமிழர்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடுகளைச் செய்ய வேண்டும். கீழடி கண்டுப்பிடிப்புகள் மூலம் நான்காயிரம் ஆண்டு பழமையான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பது உறுதியாகியுள்ளது. கீழடியில் நெல்மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.


இளம் தலைமுறை தமிழர்கள் தங்களின் பூர்வீகத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் தொடங்கப்பட்டுள்ள ‘வேர்களைத் தேடி’ என்ற திட்டத்தின் மூலம், மாணவர்கள் தமிழ்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் வந்து நமது கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் பண்பாடு சிதையும், பண்பாடு சிதைந்தால் அடையாளம் போய்விடும், அடையாளம் போய்விட்டால் தமிழர்கள் எனச் சொல்லும் தகுதியை இழந்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக

news

ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!

news

புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!

news

Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!

news

மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை

news

Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்

news

லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!

news

Om Sai.. அன்பே சாய்!

news

Remembering SPB: S. P. பாலசுப்ரமணியம் .. ஒரு தெய்வீக ஆன்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்