நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!

May 09, 2026,01:15 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி


பூமி 

சுற்றுவதும்

பூவையர்  

மகிழ்வதும்


சாதிமதம் 

தாண்டி

சட்டென 

ஆள்வதும்


நானென்பதும்

நீயென்பதும்

நாமாகிப்

போவதும்


ஈருயிர்

இணைந்து

ஓருயிர்

பிறப்பதும்




மனத்திற்கு

மருந்தாய்க்

களிம்பினைத்

தடவுவதும்


பதின்ம

வயதில்

சிறகாய் 

முளைப்பதும்


இருபது

ஆண்டில்

இரட்டிப்பு

அழகாவதும்


நாற்பது

கடந்தால்

பக்குவமாய்த்

திகழ்வதும்


நரை 

வந்தபோதும் 

கரைதொட்டு

மோதுவதும்


சிறைதந்த

கூடும்

மறைசொல்லி

ஓதும்


திரைகண்ட

பிறகும் 

இடம்

மாற்றிப்போகும்


பிரிவு 

வாட்டிய 

நிலையிலும்

உறவாடும்


விழித்திருந்தும் 

விழிகள் 

மயங்கிக்

கிடக்கும்


பூப்போன்ற

இதயத்தில்

பூகம்பம் 

வெடிக்கும்


போர்க்களமே

வந்தாலும் 

கரம்பற்றி

நிற்கும்.


(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்

news

மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்

news

தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்

news

நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!

news

DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!

news

Happy Mother's Day: அன்னையர் தினம்.. தியாகத்தையும் அன்பையும் கெளரவிக்கும் நாள்!

news

தந்தைக்கு ஓர் மடல்.. என் தந்தையே... என் விந்தையே...!

news

என்றாலும் முடியும்!

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்