- ஔவை அ.ர.தீபாரவி
பூமி
சுற்றுவதும்
பூவையர்
மகிழ்வதும்
சாதிமதம்
தாண்டி
சட்டென
ஆள்வதும்
நானென்பதும்
நீயென்பதும்
நாமாகிப்
போவதும்
ஈருயிர்
இணைந்து
ஓருயிர்
பிறப்பதும்

மனத்திற்கு
மருந்தாய்க்
களிம்பினைத்
தடவுவதும்
பதின்ம
வயதில்
சிறகாய்
முளைப்பதும்
இருபது
ஆண்டில்
இரட்டிப்பு
அழகாவதும்
நாற்பது
கடந்தால்
பக்குவமாய்த்
திகழ்வதும்
நரை
வந்தபோதும்
கரைதொட்டு
மோதுவதும்
சிறைதந்த
கூடும்
மறைசொல்லி
ஓதும்
திரைகண்ட
பிறகும்
இடம்
மாற்றிப்போகும்
பிரிவு
வாட்டிய
நிலையிலும்
உறவாடும்
விழித்திருந்தும்
விழிகள்
மயங்கிக்
கிடக்கும்
வெடிக்கும்
போர்க்களமே
வந்தாலும்
கரம்பற்றி
நிற்கும்.
(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்
21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
Travel story: சொகுசுக் கப்பலின் மொட்டை மாடியில் அமாவாசை தர்ப்பணம்.. அசந்து போன அமெரிக்கர்!
விநாயகர் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி.. ஆவணி மாத சிறப்புகள்!
Short Story: ரிசர்வ் பெட்டியில் ஒரு அன்ரிசர்வ் கலாட்டா!
கடந்த காலத்தின் பசுமை நினைவுகள்
வளர்ந்து வரும் சகிப்புத்தன்மையும் அமைதிப் பேணலும்!
Tamil Short Story: தந்தையாகிய தமையன்!
கோடைக்கால மேகம்
{{comments.comment}}