- ஔவை அ.ர.தீபாரவி
பூமி
சுற்றுவதும்
பூவையர்
மகிழ்வதும்
சாதிமதம்
தாண்டி
சட்டென
ஆள்வதும்
நானென்பதும்
நீயென்பதும்
நாமாகிப்
போவதும்
ஈருயிர்
இணைந்து
ஓருயிர்
பிறப்பதும்

மனத்திற்கு
மருந்தாய்க்
களிம்பினைத்
தடவுவதும்
பதின்ம
வயதில்
சிறகாய்
முளைப்பதும்
இருபது
ஆண்டில்
இரட்டிப்பு
அழகாவதும்
நாற்பது
கடந்தால்
பக்குவமாய்த்
திகழ்வதும்
நரை
வந்தபோதும்
கரைதொட்டு
மோதுவதும்
சிறைதந்த
கூடும்
மறைசொல்லி
ஓதும்
திரைகண்ட
பிறகும்
இடம்
மாற்றிப்போகும்
பிரிவு
வாட்டிய
நிலையிலும்
உறவாடும்
விழித்திருந்தும்
விழிகள்
மயங்கிக்
கிடக்கும்
வெடிக்கும்
போர்க்களமே
வந்தாலும்
கரம்பற்றி
நிற்கும்.
(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
{{comments.comment}}