டெல்லி: மதத்தை தொடர்புபடுத்தி பிரச்சாரம் செய்ததால், தேர்தலில் போட்டியிட பிரதமர் நரேந்திர மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என கோரி வழக்கறிஞர் ஜோன்டேல் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில் இன்று 2வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில், பிரதமர் மோடி மத ரீதியாக பேசி வாக்காளர்களைத் திசை திருப்புவதாகவும், அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், உத்திரப்பிரதேசத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி மதம் தொடர்பாக பேசியும், அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டியதாகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்து குரு பிரதிநிதிகளை அழைத்து வந்ததாகவும் கூறி பேசியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திய அரசின் செலவில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பயணித்துச் சென்று வாக்காளர்களிடையே மத அடிப்படையில் பிரச்சாரம் செய்வதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ பிரிவின் கீழ் பிரதமருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் கீழ் அவரை தேர்தலில் இருந்து 6 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யவும் வழக்கறிஞர் ஜோன்டேல் கூறியுள்ளா். டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரிக்க வேண்டிய நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்திருந்ததால், விசாரணை வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}