பிரதமர் மோடிக்கு தடை விதிக்கக் கோரி டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு.. விசாரணை 29ம் தேதி ஒத்திவைப்பு!

Apr 26, 2024,03:58 PM IST

டெல்லி: மதத்தை தொடர்புபடுத்தி பிரச்சாரம் செய்ததால், தேர்தலில் போட்டியிட பிரதமர் நரேந்திர மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என கோரி வழக்கறிஞர் ஜோன்டேல் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில் இன்று 2வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில்,  பிரதமர் மோடி மத ரீதியாக பேசி வாக்காளர்களைத் திசை திருப்புவதாகவும், அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 




அதில், உத்திரப்பிரதேசத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி மதம் தொடர்பாக பேசியும், அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டியதாகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்து குரு பிரதிநிதிகளை அழைத்து வந்ததாகவும்  கூறி பேசியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திய அரசின் செலவில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பயணித்துச் சென்று வாக்காளர்களிடையே மத அடிப்படையில் பிரச்சாரம் செய்வதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.


இந்திய  தண்டனைச் சட்டம் 153 ஏ பிரிவின் கீழ் பிரதமருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் கீழ்  அவரை தேர்தலில் இருந்து 6 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யவும் வழக்கறிஞர் ஜோன்டேல் கூறியுள்ளா். டெல்லி உயர்நீதிமன்றத்தில்  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரிக்க வேண்டிய நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்திருந்ததால், விசாரணை வரும் 29ம்  தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்