விருதுநகர்: விஜபி தொகுதியான விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளரும், மறைந்த விஜயகாந்த்தின் மகனுமான விஜய பிரபாகரன் முன்னிலை பெற்றுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலையில் உள்ளார். மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன். இவர் அரசியலுக்குள் நுழைந்ததுமே நேரடியாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். அரசியலுக்கு புதியவர் என்றாலும் அப்பா விஜயகாந்தின் செல்வாக்கை முன் வைத்து களம் காண்கிறார்.

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.அது மட்டும் இன்றி ஏற்கனவே சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் மாணிக்க தாகூரும் போட்டியிடுகிறார். விஐபி தொகுதியான விருதுநகரில் மும்முனையில் கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.
யார் மகுடம் சூட்டுவார்கள் என்று தெரியாமல் இருந்த நிலையில், விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலை உள்ளார். 2வது சுற்று முடிவில் விஜய பிரபாகரன் 19,680 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். விஜயகாந்தின் மறைவு காரணமாக அனுதாப ஓட்டுகள் விஜய பிரபாகரனுக்கு அதிக அளவில் கிடைத்துள்ளன. இவரை எதிர்த்து போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 19,493 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார். ஓட்டு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் டிரெண்ட் போகப் போகத்தான் யார் வெல்லப் போகிறார் என்பது தெளிவாகும்.
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
{{comments.comment}}