விருதுநகர்: விஜபி தொகுதியான விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளரும், மறைந்த விஜயகாந்த்தின் மகனுமான விஜய பிரபாகரன் முன்னிலை பெற்றுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலையில் உள்ளார். மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன். இவர் அரசியலுக்குள் நுழைந்ததுமே நேரடியாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். அரசியலுக்கு புதியவர் என்றாலும் அப்பா விஜயகாந்தின் செல்வாக்கை முன் வைத்து களம் காண்கிறார்.
விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.அது மட்டும் இன்றி ஏற்கனவே சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் மாணிக்க தாகூரும் போட்டியிடுகிறார். விஐபி தொகுதியான விருதுநகரில் மும்முனையில் கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.
யார் மகுடம் சூட்டுவார்கள் என்று தெரியாமல் இருந்த நிலையில், விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலை உள்ளார். 2வது சுற்று முடிவில் விஜய பிரபாகரன் 19,680 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். விஜயகாந்தின் மறைவு காரணமாக அனுதாப ஓட்டுகள் விஜய பிரபாகரனுக்கு அதிக அளவில் கிடைத்துள்ளன. இவரை எதிர்த்து போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 19,493 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார். ஓட்டு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் டிரெண்ட் போகப் போகத்தான் யார் வெல்லப் போகிறார் என்பது தெளிவாகும்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}