Motivational Poems: நெஞ்சினில் உறுதி கொள்!

Apr 30, 2026,12:36 PM IST

- டாக்டர் கோ. லதா


நெஞ்சினில் உறுதி கொண்டு நிமிர்ந்துநில்

அஞ்சுதல் வேண்டாம் ஆண்மை கொண்டெழு

துஞ்சுதல் நீக்கி துணிந்து செயல்படு

வஞ்சம் களைந்து வாழ்வை வென்றிடு


வீழ்ந்திடும் போதும் விழியைத் துடைத்தெழு

தாழ்ந்திடா மனமே தரணியை ஆளும்

சூழ்ந்திடும் இருளைச் சுடராய் கிழித்திடு

வாழ்ந்திடும் வகையில் வலிமை சேர்த்திடு


தடைகள் வந்தால் தகர்த்து முன்னேறு

இடர்கள் சூழினும் இதயம் கலங்காதே

படைகள் எதிர்த்தால் பதறாது நின்றிடு

உடையா வைரமாய் உறுதி கொண்டிடு




முயற்சி ஒன்றே முன்னேறும் வழியாம்

பயிற்சி தந்திடும் பாரினில் வெற்றியாம்

உயர்ச்சி காண உழைப்பே மூலமாம் 

முயற்சி உடையார் முடியாது இல்லையே


--


சர்வதேச ஜாஸ் தினம்


ஏப்ரல் முப்பதாம் நாளில்  

எழுந்தது ஜாஸ் திருநாள்  

உலகம் எங்கும் ஒலிக்கும்  

உயிரின் இனிய கீதம்  


கருமை மண்ணில் முளைத்து  

அமெரிக்க மண்ணில் செழித்து  

விலங்கை உடைத்த பண்ணிசை  

விடுதலை பேசும் பொன்னிசை  


சாக்ஸபோன் குழல் நெளியும்  

டிரம்சின் துடிப்பு துள்ளும்  

பியானோ விரல்கள் பாயும்  

பாஸின் நாதம் நெஞ்சள்ளும்  


ஹெர்பி ஹான்காக் வித்திட்டார்  

ஐ.நா. மன்றம் வாழ்த்தியது  

கலாச்சார பாலம் அமைத்து  

இனங்கள் இணைக்கும் இசையிது  


சுதந்திர கீதம் பாடிடும்  

படைப்பின் சிறகு விரித்திடும்  

நிறங்கள் கடந்து கலந்திடும்  

நேசப் பூக்கள் மலர்ந்திடும்  


தேசம் கடந்த தென்றலிது  

தீமை அகற்றும் மந்திரம்  

ஜாஸ் ஒரு மொழி  

அன்பின் இசை வழி


--


எழுத்தால் எரிந்தவன்...


எழுத்தால் எரிந்தவன் ஏற்றிய தீயே

பழுத்த தமிழால் பாடிய புலவன் 

விழுதாய் நின்று வீறுகொண் டெழுந்தான் 

தொழுத்தால் துயரம் துடைத்தவன் கவிஞன்


பாரதி வழியில் பாய்ந்த புயலே

நேரத் தமிழின் நெருப்பினை ஏந்தினான்

சீராய் உழைக்கும் செந்தமிழ் காத்தான்

வீரத் துடனே விடுதலை பாடினான்


பகுத்தறி வாலே பழமையைச் சாடினான்

புதுமை விதைத்த புரட்சிக் கவிஞனே



--


உலக கால்நடை மருத்துவர் தினம்




ஏப்ரல் முப்பதாம் நாளில்  

கால்நடை தினம் மலரும்  

உயிர்கள் காக்கும் மருத்துவர்  

உலகம் போற்றும் திருநாள்  


பசுவின் நோயை தீர்ப்பார்  

ஆட்டின் வலியை மாற்றுவார்  

நாயின் காயம் ஆற்றுவார்  

பறவை சிறகை சீர்செய்வார்  


ஊமை உயிரின் குரலாவார்  

வாயில்லா ஜீவன் காப்பார்  

இரவும் பகலும் உழைப்பார்  

இரக்கம் கொண்ட உள்ளத்தார்  


"ஒரே ஆரோக்கியம்" கொள்கையில்  

மனிதர் விலங்கு இணைப்பார்  

சூழல் நலமும் பேணுவார்  

நோய்த்தடுப்பு வேலி காப்பார்  


கால்நடை செல்வம் காப்பதால்  

விவசாயி வாழ்வு செழிக்கும்  

உணவு பாதுகாப்பு உறுதியாம்  

நாட்டின் நலனும் உயர்ந்திடும்  


வெண்கோட்டு தேவதைகள் அவர்  

விலங்கின் கடவுள் ஆவார்  

வணங்கி நன்றி சொல்வோமே  

வாழ்த்தி மகிழ்வோம் இந்நாளில்


--


சகிப்புத்தன்மை ஆணை


முந்நூற்று பதினொன்று ஆண்டில்  

ஏப்ரல் முப்பதாம் நாளில்  

ரோமானிய பேரரசர் கலேரியஸ்  

சகிப்புத்தன்மை ஆணை பிறப்பித்தார்  


கிறிஸ்தவர்கள் மீதான துன்பம்  

கொடுமைகள் யாவும் முடிந்தது  

இரத்தம் சிந்திய காலம்  

இன்றோடு ஓய்ந்தது என்றார்  


வழிபாட்டு உரிமை கிடைத்தது  

ஆலயங்கள் திறக்க ஆணையிட்டார்  

அச்சம் விலகி நின்றது  

அமைதி மலர்ந்து வந்தது  


சிறையில் வாடிய மக்கள்  

விடுதலை பெற்று மகிழ்ந்தார்  

மறைந்து வாழ்ந்த நம்பிக்கை  

மறுபடி ஒளிர்ந்து எழுந்தது  


சகிப்புத்தன்மை என்பது என்ன  

வேற்றுமை ஏற்கும் பண்புதான்  

மதங்கள் பலவும் ஒன்றே  

மனிதம் மட்டுமே பெரிதென  


ஆணை வழங்கிய நாளிது  

அன்பின் விதைகள் தூவியது  

வரலாற்றில் பொன்னேடாய் நின்று  

வழிகாட்டும் தீபம் ஆனது


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்