விதையின் கனவு!

Dec 20, 2025,01:17 PM IST

- க .யாஸ்மின்சிராஜீதீன்  


விதையில் தொடங்கி விருட்சமாகி 

உலக உயிர்களுக்கெல்லாம் பயன்பட வேண்டும் என 

கனவு கண்டேன்......!!!! 

அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டாயே மனிதா..!!! 

விதையின் கனவு கனவாகவே ஆகிவிட்டால்  

கனவு காண உயிர்கள் உலகில் இல்லாமல் போய்விடும் என்பதை ஏன் மறந்தாய்....!!! 

உன் உயிர்வளிக்கு மூன்று விருட்சம் தேவை  என அறிவியல்  எடுத்தியம்புவதை  

நீ அறியவில்லையா...!!!!.

தெரிந்தும்  நமக்கென்ன என 

கடந்து செல்கிறாயா... !!! 

விதை உறங்குவதில்லை

முளைப்பதற்கு முட்டி




மோதிக்கொண்டிருக்கிறது 

மண்ணுக்கடியில்... !!!! 

விருட்சம் விதையின் கனவு ... !! 

வாழ்க்கை மனிதனின் கனவு..!!! 

கனவு காணுங்கள் விருட்சமாவீர்கள் ..!!!

பல தடைகளை தகர்த்து 

இப்படிக்கு விதை....!!!!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

news

அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு

news

நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்

news

ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

news

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

news

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?

news

வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!

news

திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா

அதிகம் பார்க்கும் செய்திகள்