விதையின் கனவு!

Dec 20, 2025,01:17 PM IST

- க .யாஸ்மின்சிராஜீதீன்  


விதையில் தொடங்கி விருட்சமாகி 

உலக உயிர்களுக்கெல்லாம் பயன்பட வேண்டும் என 

கனவு கண்டேன்......!!!! 

அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டாயே மனிதா..!!! 

விதையின் கனவு கனவாகவே ஆகிவிட்டால்  

கனவு காண உயிர்கள் உலகில் இல்லாமல் போய்விடும் என்பதை ஏன் மறந்தாய்....!!! 

உன் உயிர்வளிக்கு மூன்று விருட்சம் தேவை  என அறிவியல்  எடுத்தியம்புவதை  

நீ அறியவில்லையா...!!!!.

தெரிந்தும்  நமக்கென்ன என 

கடந்து செல்கிறாயா... !!! 

விதை உறங்குவதில்லை

முளைப்பதற்கு முட்டி




மோதிக்கொண்டிருக்கிறது 

மண்ணுக்கடியில்... !!!! 

விருட்சம் விதையின் கனவு ... !! 

வாழ்க்கை மனிதனின் கனவு..!!! 

கனவு காணுங்கள் விருட்சமாவீர்கள் ..!!!

பல தடைகளை தகர்த்து 

இப்படிக்கு விதை....!!!!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்