அதிகாலையில் செம மழை.. ஆனந்தமாய் நனைஞ்சு போன சென்னை!

Aug 29, 2023,09:38 AM IST
சென்னை : சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த மழை மேலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது.

ஆனால் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அதிகாலை 3 மணி துவங்கி சென்னையின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. தி.நகர், ராதாகிருஷ்ணன் சாலை, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

அதேபோல புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை காணப்பட்டது. ராத்திரியிலும், அதிகாலையிலும் பெய்த இந்த மழையால் சென்னை குளிர்ந்து போனது.. மக்களும் மகிழ்ந்து போனார்கள்.

இந்த மழையானது இன்றும் தொடரும் என்று தெரிகிறது. இன்று மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மூத்த தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்கும் விஜய்.. தமிழகத்தில் உருவாகும் புதிய அரசியல் டிரெண்ட்

news

JCD Prabhakar: தமிழகத்தின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு.. துணை சபாநாயகரானார் விஜய் சங்கர்

news

தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்

news

N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?

news

'உளமாற உறுதி ஏற்கிறேன்' இந்த சொல்லின் வரலாறு தெரியுமா?

news

கணினி அறிவியல் பாடத்திற்காக வந்த நிதியில் மோசடி.. பட்டதாரி ஆசிரியர்கள் பரபரப்புப் புகார்!

news

சிந்தனைச் சிதறல்.. ஆணவம் அறிய விடாமல் நம்மைக் கெடுக்கும்

news

Proverb: தாயைப் பார்த்து பெண்ணை கொள், பாலை பார்த்து பசுவைக் கொள்!

news

ஆசையில பாத்திகட்டி!

அதிகம் பார்க்கும் செய்திகள்