அதிகாலையில் செம மழை.. ஆனந்தமாய் நனைஞ்சு போன சென்னை!

Aug 29, 2023,09:38 AM IST
சென்னை : சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த மழை மேலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது.

ஆனால் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அதிகாலை 3 மணி துவங்கி சென்னையின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. தி.நகர், ராதாகிருஷ்ணன் சாலை, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

அதேபோல புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை காணப்பட்டது. ராத்திரியிலும், அதிகாலையிலும் பெய்த இந்த மழையால் சென்னை குளிர்ந்து போனது.. மக்களும் மகிழ்ந்து போனார்கள்.

இந்த மழையானது இன்றும் தொடரும் என்று தெரிகிறது. இன்று மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் காலியாகும் ராஜ்யசபா இடங்கள்...நிரப்புவதில் இப்படி ஒரு சிக்கலா?

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026...தொகுதிகளை குறைத்த பாஜக...காரணம் இது தானா?

news

ஜனநாயகன் வழக்கு வாபஸ்...படம் எப்போது ரிலீசாகும்? சென்சார் சட்டம் சொல்வது இதுதான்

news

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!

news

சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்

news

திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?

news

செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி

news

வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்