அதிகாலையில் செம மழை.. ஆனந்தமாய் நனைஞ்சு போன சென்னை!

Aug 29, 2023,09:38 AM IST
சென்னை : சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த மழை மேலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது.

ஆனால் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அதிகாலை 3 மணி துவங்கி சென்னையின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. தி.நகர், ராதாகிருஷ்ணன் சாலை, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

அதேபோல புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை காணப்பட்டது. ராத்திரியிலும், அதிகாலையிலும் பெய்த இந்த மழையால் சென்னை குளிர்ந்து போனது.. மக்களும் மகிழ்ந்து போனார்கள்.

இந்த மழையானது இன்றும் தொடரும் என்று தெரிகிறது. இன்று மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்