டெல்லி: மத்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார்.
மத்திய தேர்தல் ஆணையத்தில் ஆணையராக இருந்து வந்தவர் அருண் கோயல். அவரது பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அருண் கோயல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை உடனடியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.
3 தேர்தல் ஆணையர்களைக் கொண்ட ஆணையத்தில் ஏற்கனவே ஒரு ஆணையர் பதவி காலியாக இருந்தது. தற்போது அருண் கோயல் ராஜினாமாவைத் தொடர்ந்து காலியிடங்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே ஆணையர் பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அருண் கோயல் ராஜினாமா செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யார் இந்த அருண் கோயல்?
அருண் கோயல் ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 2022ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி இவர் தனது அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கின்போது, ஆஜராகி வாதாடிய பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறுகையில், மின்னல் வேகத்தில் இந்த நியமனத்தை நடத்தியுள்ளனர். அனைத்து விதிமுறைகளையும் மத்திய அரசு அப்பட்டமாக மீறியுள்ளது. எனவே இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார் என்பது நினைவிருக்கலாம்.
1985ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல், தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பு மத்திய கனரக தொழில்துறை செயலாளராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}