Mars.. செவ்வாய் கிரகத்தில் தண்ணீருக்கான ஆதாரம் இருக்காம்.. சொல்கிறது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்!

Jan 20, 2024,05:08 PM IST

லண்டன்: செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் திரவ வடிவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை ஐரோப்பிய நிறுவனம் உறுதி செய்துள்ளது.


பூமியை தவிர வேறு  கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா? என்பதை பற்றி விஞ்ஞானி ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில், செவ்வாய் கிரகமும் நீண்ட காலமாக கணக்கில் எடுக்கப்பட்டு வருகிறது. 




காரணம், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் மற்றும் வேறு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற ஊகம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான ஆதாங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர். தற்பொழுது திரவ வடிவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


செவ்வாய் கிரகத்தில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில் நீராதாரம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில், சுமார் 3.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு, தடிமனான பனிக்கட்டி படலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உருகினால் அந்த கிரகத்தில் 8.9 அடி ஆழத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என அறியப்பட்டுள்ளது.  மேலும், இந்த ஐஸ் கட்டிகள் உருகினால், முழு கிரகத்தையும் 1.5 முதல் 2.7 மீட்டர் ஆழத்திற்கு  நீர்  மூடிவிடும். இது பூமியின் செங்கடலை நிரப்பப் போதுமானதாகும். செவ்வாய் கிரகத்தின் இந்த பகுதியில் இதுவரை காணப்படாத நீர் படலம் இது ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.


செவ்வாய் கிரகத்தின் எதிர்கால ஆய்வுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து தகவலை https://www.esa.int/Science_Exploration/Space_Science/Buried_water_ice_at_Mars_s_equator என்ற இணையதளத்தின் வாயிலாக அறியலாம்.

சமீபத்திய செய்திகள்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

news

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை

news

இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

எம்மை குளிர்விக்க வந்தவளே....!

அதிகம் பார்க்கும் செய்திகள்