Mars.. செவ்வாய் கிரகத்தில் தண்ணீருக்கான ஆதாரம் இருக்காம்.. சொல்கிறது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்!

Jan 20, 2024,05:08 PM IST

லண்டன்: செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் திரவ வடிவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை ஐரோப்பிய நிறுவனம் உறுதி செய்துள்ளது.


பூமியை தவிர வேறு  கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா? என்பதை பற்றி விஞ்ஞானி ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில், செவ்வாய் கிரகமும் நீண்ட காலமாக கணக்கில் எடுக்கப்பட்டு வருகிறது. 




காரணம், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் மற்றும் வேறு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற ஊகம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான ஆதாங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர். தற்பொழுது திரவ வடிவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


செவ்வாய் கிரகத்தில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில் நீராதாரம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில், சுமார் 3.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு, தடிமனான பனிக்கட்டி படலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உருகினால் அந்த கிரகத்தில் 8.9 அடி ஆழத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என அறியப்பட்டுள்ளது.  மேலும், இந்த ஐஸ் கட்டிகள் உருகினால், முழு கிரகத்தையும் 1.5 முதல் 2.7 மீட்டர் ஆழத்திற்கு  நீர்  மூடிவிடும். இது பூமியின் செங்கடலை நிரப்பப் போதுமானதாகும். செவ்வாய் கிரகத்தின் இந்த பகுதியில் இதுவரை காணப்படாத நீர் படலம் இது ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.


செவ்வாய் கிரகத்தின் எதிர்கால ஆய்வுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து தகவலை https://www.esa.int/Science_Exploration/Space_Science/Buried_water_ice_at_Mars_s_equator என்ற இணையதளத்தின் வாயிலாக அறியலாம்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்