லண்டன்: செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் திரவ வடிவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை ஐரோப்பிய நிறுவனம் உறுதி செய்துள்ளது.
பூமியை தவிர வேறு கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா? என்பதை பற்றி விஞ்ஞானி ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில், செவ்வாய் கிரகமும் நீண்ட காலமாக கணக்கில் எடுக்கப்பட்டு வருகிறது.
காரணம், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் மற்றும் வேறு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற ஊகம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான ஆதாங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர். தற்பொழுது திரவ வடிவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில் நீராதாரம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில், சுமார் 3.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு, தடிமனான பனிக்கட்டி படலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உருகினால் அந்த கிரகத்தில் 8.9 அடி ஆழத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என அறியப்பட்டுள்ளது. மேலும், இந்த ஐஸ் கட்டிகள் உருகினால், முழு கிரகத்தையும் 1.5 முதல் 2.7 மீட்டர் ஆழத்திற்கு நீர் மூடிவிடும். இது பூமியின் செங்கடலை நிரப்பப் போதுமானதாகும். செவ்வாய் கிரகத்தின் இந்த பகுதியில் இதுவரை காணப்படாத நீர் படலம் இது ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தின் எதிர்கால ஆய்வுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலை https://www.esa.int/Science_Exploration/Space_Science/Buried_water_ice_at_Mars_s_equator என்ற இணையதளத்தின் வாயிலாக அறியலாம்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}