லண்டன்: செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் திரவ வடிவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை ஐரோப்பிய நிறுவனம் உறுதி செய்துள்ளது.
பூமியை தவிர வேறு கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா? என்பதை பற்றி விஞ்ஞானி ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில், செவ்வாய் கிரகமும் நீண்ட காலமாக கணக்கில் எடுக்கப்பட்டு வருகிறது.
காரணம், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் மற்றும் வேறு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற ஊகம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான ஆதாங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர். தற்பொழுது திரவ வடிவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில் நீராதாரம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில், சுமார் 3.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு, தடிமனான பனிக்கட்டி படலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உருகினால் அந்த கிரகத்தில் 8.9 அடி ஆழத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என அறியப்பட்டுள்ளது. மேலும், இந்த ஐஸ் கட்டிகள் உருகினால், முழு கிரகத்தையும் 1.5 முதல் 2.7 மீட்டர் ஆழத்திற்கு நீர் மூடிவிடும். இது பூமியின் செங்கடலை நிரப்பப் போதுமானதாகும். செவ்வாய் கிரகத்தின் இந்த பகுதியில் இதுவரை காணப்படாத நீர் படலம் இது ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தின் எதிர்கால ஆய்வுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலை https://www.esa.int/Science_Exploration/Space_Science/Buried_water_ice_at_Mars_s_equator என்ற இணையதளத்தின் வாயிலாக அறியலாம்.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}