கோகுலாஷ்டமி.. ஆடி சனிக்கிழமையில்.. கார்த்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால் விசேஷம்!

Aug 15, 2025,11:56 AM IST

கோகுலாஷ்டமி.. விசுவாவசு வருடம் 20 25 ஆகஸ்ட் மாதம் 16ஆம் நாள் சனிக்கிழமை கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் கடைசி நாளான ஆடி 31 ஆம் தேதி கார்த்திகை நட்சத்திரம் சேர்ந்து வருவதனால் முருகப்பெருமானுக்கு ஆடி கிருத்திகை நாளாகவும் அமைந்துள்ளது. சனிக்கிழமை நாளன்று கிருஷ்ண பகவானுக்குரிய கோகுலாஷ்டமியும், முருகப்பெருமானுக்குரிய ஆடி கிருத்திகையும் சேர்ந்து வந்திருப்பது மிகவும் சிறப்பான நாளாகும்.   


கோகுலாஷ்டமி வழிபாடு செய்யும் நேரம் :ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 01:41 மணி முதல் இரவு 11 :13 மணி வரை உள்ளது. கோகுலாஷ்டமி கொண்டாடுபவர்கள், சனிக்கிழமை முழுதும் கிருஷ்ண பகவானின் திதி யான அஷ்டமி திதி  இருப்பதினால் ஜென்மாஷ்டமி எனப்படும் கோகுலாஷ்டமி வழிபாடு செய்து கொண்டாடலாம்.




வட இந்தியாவில் கோகுலாஷ்டமி மிகவும் சிறப்பாகவும், விமர்சையாகவும் கொண்டாடுவார்கள். இந்த நாள் கண்ணனுக்கு விரதம் இருந்து கண்ணனுடைய கால் தடம் பச்சரிசி மாவினால் வீட்டின் வெளிப்புறத்தில் இருந்து பூஜை அறை வரை அவர் நடந்து வருவது போல கோலமிட்டு ,எங்கள் வீட்டுக்கு வா கண்ணா... வா ...என்று அழைத்து, கிருஷ்ணருக்கு பிடித்தமான நெய்வேத்திய பக்ஷணங்களை செய்து, படைத்து கிருஷ்ண பகவான் பஜனைகள் பாடி, ஆடி ,கொண்டாடி மகிழ்வார்கள்.


மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமே கிருஷ்ண அவதாரமாகும். எனவே கோகுலாஷ்டமி நாள் திருமணம் ஆகி குழந்தை வரம் தாமதமாகி இருக்கும் தம்பதியர் கோகுலாஷ்டமி தினத்தன்று கிருஷ்ணரை வழிபட ,விரைவில் கிருஷ்ணரே குழந்தையாக அவர்களுக்கு வந்து அவதரிப்பார் என்பது ஐதீகம்.


கிருஷ்ண பகவான் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன. கோகுலாஷ்டமி அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து மாலை வேளையில் பூஜையை தொடங்கி ,  வழிபாடு செய்து ,மறுநாள் காலையில் பூஜை நிறைவு செய்து கிருஷ்ணருக்கு படைத்த நைவேத்திய  பட்சணங்களை முதலில் உண்டு சிலர் வீட்டு வழக்கப்படி பூஜை நிறைவு செய்வார்கள்.


ஆகஸ்ட் 16ஆம் தேதி அஷ்டமி திதியில் அன்று மாலை நேரத்தில் "கோகுலாஷ்டமி "ஆக கண்ணனை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து, மறுநாள் ஆகஸ்ட் 17ஆம் தேதி ரோகிணி நட்சத்திரம் இருப்பதினால் "கிருஷ்ண ஜெயந்தி"யாக அவரவர் வழக்கப்படி கொண்டாடி மகிழலாம்.


கிருஷ்ண பகவானுக்கு பிடித்த உணவுகள்: வெண்ணெய் ,தயிர், பால் இனிப்பு சீடை ,கார சீடை, அவல் ,முறுக்கு, லட்டு, ஜவ்வரிசி பாயாசம் போன்றவற்றை கிருஷ்ணருக்கு பிடித்தமான உணவுகளை படையல் ஆக படைத்து வழிபடுவதனால் அவருடைய ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.


வீடுகளில் பூஜை செய்யும் வழக்கம் இல்லாதவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடுகள் செய்து கோகுலாஷ்டமி நன்னாளை  கொண்டாடி மகிழலாம். கோகுலாஷ்டமி நாளான இந்த நன்னாளில் கிருஷ்ண பகவான் அனைவருக்கும் நல்வாழ்வு நல்கட்டும் . அனைவருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கமேனி படுகொலை.. இந்தியா இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் - சசி தரூர் கருத்து

news

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை உலுக்கும் 1,000 கி.மீ நீள மழை மேகக்கூட்டம்

news

மேற்காசிய வான்வெளியைத் தவிருங்கள்.. விமான நிறுவனங்களுக்கு DGCA அறிவுரை

news

ரூ. 10,000 இழந்த வாடிக்கையாளர்.. ரூ. 3.28 லட்சம் கொடுங்க.. வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் சூடு!

news

ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறள்கள்.. அசத்திய சென்னை மாநகராட்சி மாணவர்கள்!

news

எதிர்காலத்தை வழிநடத்துதலும், சவால்களும்.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சி கதை (7)

news

வயலாநல்லூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: மாணவ - மாணவிகள் பங்கேற்பு

news

செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!

news

நிறை குடம்

அதிகம் பார்க்கும் செய்திகள்