சென்னை : சென்னையின் பல பகுதிகளில் நேற்று நள்ளிரவில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த ஒரு நாள் மழையால் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் பலவற்றிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி விட்டது.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அஸ்தினாபுரத்தில் பல பகுதிகளில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவதாலும், ஏற்கனவே சாலைகள் மோசமாக இருப்பதாலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால் மக்கள் பெரும் துயருக்குள்ளானார்கள்.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் பகலில் வெயில் கடுமையாக இருந்து அனல் காற்று வீசும் சூழல் உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வழக்கத்தை விட மிக அதிகமாக சென்னையில் பல பகுதிகளிலும் மிக அதிக அளவிலான கனமழை கொட்டி தீர்த்தது.
தி.நகர், அண்ணாசாலை, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. விடிய விடிய பெய்து வந்த இந்த கன மழையால் சென்னையில் ஒரு சில தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது . புறநகர்களிலும் இதே நிலைதான்.
தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை அஸ்தினாபுரம், திருமலைநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே இப்பகுதியில் சாலைகள் மோசமாக உள்ளன. நடக்கக் கூட தகுதி இல்லாத அளவுக்கு சாலைகள் உள்ளன. மக்கள் எத்தனையோ முறை குமுறியும் கூட எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறது மாநகராட்சி.
சாலைகள் மோசமாக உள்ள நிலையில் தற்போது அங்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதை வெயில் காலத்திலேயே தொடங்கியிருக்க வேண்டும். மழை பெய்யும் சமயத்தில் தொடங்கியதால் இப்போது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆங்காங்கே சாலைகளை பெயர்த்து எடுத்துள்ளதால் மழை நீர் வெள்ளம் போல தேங்கி பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக 12, 13 ஆகிய தெருக்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மெயின் ரோட்டில் உள்ள ஜியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அந்தத் தண்ணீரை எப்படிக் கடத்துவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டுள்ளனர். இன்றும் மழை பெய்தால் நிலைமை மோசமாகும் அளவுக்கு உள்ளது. தற்போது மோட்டார் பம்ப் வைத்து தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
ஒட்டுமொத்த தேசமும் நிலவை இந்தியா வென்றதை நேற்று கொண்டாடித் தீர்த்தது... ஆனால் இப்போதும் கூட நம்மால் முறையான மழை நீர் வடிகாலை செய்ய முடியாமல் இருப்பது வேதனையானது.
குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. நாளை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்!
Operation Sindoor.. பாகிஸ்தானை எப்படி தாக்கினோம்.. விளக்கிய பெண் அதிகாரிகள்.. யார் இவர்கள்?
4 years of DMK Govt: திராவிட மாடல் ஆட்சியே விடியல் தரும் ஆட்சி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இந்திய தாக்குதலில்.. எங்க குடும்பத்துல 10 பேரு செத்துப் போயிட்டாங்க.. மசூத் அஸார் அலறல்!
மங்கள மீனாட்சிக்கு மதுரையில் திருக்கல்யாணம்.. பெண் குழந்தைகளுக்கு வைக்க 31 தமிழ்ப் பெயர்கள்!
ராணுவத்திற்கு ராயல் சல்யூட் அடித்த விஜய்.. இதுதான் இந்தியாவின் முகம்.. பாராட்டிய சிவகார்த்திகேயன்!
இந்தியாவின் 25 நிமிடத் தாக்குதல்.. கொல்லப்பட்ட 70 பயங்கரவாதிகள்.. திரில் நடவடிக்கை!
IPL வரலாற்றில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை.. 3வது முறையாக.. 500+ ரன்களைக் கடந்து புதிய வரலாறு!
சென்னை சூப்பர் கிங்ஸுடன் இன்று மோதல்.. பெரும் வெற்றியைப் பெறும் மும்முரத்தில் KKR!
{{comments.comment}}