- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: கடும் கோடைகாலத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவது முக்கியமானது. அந்த வகையில், உயர் ஆற்றல் மிக்க உணவான கம்பு சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கம்பு ஒரு கப்
மாங்காய் பொடி பொடியாக கட் செய்தது அரை கப்
சிறிய வெங்காயம் பொடியாக கட் செய்து அரை கப்
கெட்டியான தயிர் ஒரு பெரிய கப்
உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை
கம்பு நன்றாக கழுவவும். பிறகு அதனை நன்றாக தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைக்கவும். (குறிப்பு :மிக்ஸியில் போடும்பொழுது கல் உப்பு சிறிதளவு போட்டு அரைக்க வேண்டும்)
1. ஒரு குக்கரில் இந்த அரைத்த கம்பை போடவும்
2. இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும் நன்றாக கிளறி விடவும் கொதி வரும் வரை கிளறவும் அது அப்படியே கெட்டியாகி வரும்.
3. அது கெட்டியான உடன் மேலும் அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கர் மூடி போட்டு மூன்று அல்லது நான்கு விசில் விடவும்.
4. குக்கர் பிரஷர் அடங்கியதும் அதனைத் திறந்து நன்றாக கிளறவும். கம கம வென கம்பு சாதம் வாசனை சூப்பரா இருக்கும்.
5. இந்த கம்பு சாதத்துடன் வடித்த அரிசி சாதம் சேர்த்து சாப்பிட அருமையாக ருசியாக இருக்கும்.
6. ஒரு கப் கெட்டி தயிர், பொடியாக கட் செய்த மாங்காய், சிறிய வெங்காயம் சேர்த்து நன்றாக பிசைந்து கெட்டியாக தயிர் சாதம் போல் இதனை சாப்பிடலாம்..
கம்பு சாதம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா!
கம்பு ஒரு உயர் ஆற்றல் உணவு .இதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது. இதனால் ரத்த சோகை அதாவது அனிமியா தடுக்கப்படுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
லிக் நின் என்னும் பைட்டோ நியூட்ரியன் புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது. கம்பில் உள்ள கரையாத நார்ச்சத்து உணவின் இயக்கத்தை அதிகரிக்கிறது மற்றும் பித்த சுரப்பை குறைக்கிறது.
இது ஒரு குறைந்த கலோரி உணவு, உடல் எடையை குறைக்கவும், உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. *பித்தப்பை கற்கள் வராமல் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ தோல் ஆரோக்கியத்திற்கும் கண்பார்வைக்கும் நல்லது.
கோடைகாலத்தில் கம்பு சாதம் போன்ற சிறு தானிய உணவு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் இது போன்ற ரெசிபிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}