இதழோசைத் தேடி!

Apr 29, 2026,03:18 PM IST

- பாவலர் மாயோன்மங்கை


முல்லையிதழ்

முனுமுனுப்பில்


முகவரியைத்

தேடுகின்றேன்


முகம்நோக் காத்

தேடலிது


அகம்விரும்புதே

ஆசையும் உள்ளூற




அடையாளம் இல்லை

அவளை எப்படி?


ஆடும் அலைகளது ஓசையிலும்

அந்த உதடுக்குள் உதிர்த்த மெளனம்


உணர்ந்ததே எனது

நெஞ்சம்


கவிதையை நாடிக்

கடற்கரையிலே நான்


கண்கள் வாடுகிறது

காதுகள்   தேடுகிறது


விடுவேனா உன்னை

விரைவில் கேட்பேனடி


முனுமுனுத்த 

மல்லிச்சரமே  உன்


முகவரி வாங்குவேன்

முதல் முத்தம் உனக்கே!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்