- கவிஞர் மு.வரதகுமாரி
இயற்கையின் பசுமையில்
இனிமையாய்ப் பிறந்து வருபவளே!!
பொதிகை மலையிலே புறப்பட்டு
தவழ்ந்து வருபவளே!!
மனித மனத்தை மட்டற்ற மகிழ்ச்சியாய் மாற்றுபவளே!!
புத்தம் புதிய பூவினத்தைப் பூக்கச் செய்பவளே!!
சூரியனின் கொடுமையிலும்
குளிர்ச்சியைத் தர நினைப்பவளே!!
மாலைப் பொழுதை மகிழ்விக்க நடனமாடி வருபவளே!!

ஆழிக்கரையருகே அனைவர் மனத்தையும் கொள்ளை கொண்டவளே!!
புழுக்கத்திலும் புன்னகை பூக்கும் புதுமை கொண்டவளே!!
வியர்வைக்கு மருந்தாய், வெயிலுக்கு விருந்தாய்த், திகழ்பவளே!!
இப்போது என் நிலை உனக்குத் தெரியாதா?
விரைந்து, விழைந்து தென்றலே என்னைத் தொடு!
(கவிஞர் மு. வரதகுமாரி, திருச்சி)
மெய்நட்பு!
பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
Book Review - புத்தக விமர்சனம்.. திட்டம் 6
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்..!
உழைக்காத காசு!
எந்தன் முருகன்!
{{comments.comment}}