பா.பானுமதி
ஆசையும் அச்சமும் பின்னிப்பிணைந்து
அலைக்கழிக்கும்
ஓசையில்லா உலகம் தேடும் போது
பாஷை புரியாமல் பரிதவிக்கும்
நிராசைகள் நித்தம் ஏற்படும் போது
ஓ..ராசையும் உயிர் பெறாது
அச்சம் விட்டு அகலக்கால் வைத்தால்
சொச்சமும் போய்விடும்
உச்சத்தில் நின்று சட்டமாய் பேசினால்
மிச்சம் காணாது

பசை போட்டு ஒட்டிய பேராசைகள் பிணைந்து
இசையும் கசையடியாகும்
அசை போட்டு பார்த்தால் அனைத்தும் மாறிவிடும்
நிலையற்ற தன்மை நெஞ்சம் மறந்துவிடும்
இன்பமும் துன்பமும் ஒன்றே தான்
எதுவும் நிலைப்பதில்லை
சிலையாக நிற்க பழகினால்
விலையாக எதுவும் கொடுக்காமல் வீணாக ஏதும் படிக்காமல்
ஆசைகள் மீறினால் அச்சம் தாக்கும்
ஓரளவுக்கு தேறினால் துச்சம் ஆக்கும்
ஆலமரம் ஆனாலும் புயலுக்கு தாங்காது
அசையும் நாணல் புயலுக்கு நீங்காது
தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கு விசாரணைக்கு சென்னை ஹைகோர்ட் தடை
கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்
உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?
Dilani Sridharan Poem: கைம்பெண்ணின் க(வி)தையிது!
Santhi Sinnathambi Poem: மாற்றியதோ மாறியதோ!
உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?
உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?
நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
கரும்பாக இல்லறம் இனிக்க காவேரி தாய் வேகமாய் வருகிறாள்!
{{comments.comment}}