பா.பானுமதி
ஆசையும் அச்சமும் பின்னிப்பிணைந்து
அலைக்கழிக்கும்
ஓசையில்லா உலகம் தேடும் போது
பாஷை புரியாமல் பரிதவிக்கும்
நிராசைகள் நித்தம் ஏற்படும் போது
ஓ..ராசையும் உயிர் பெறாது
அச்சம் விட்டு அகலக்கால் வைத்தால்
சொச்சமும் போய்விடும்
உச்சத்தில் நின்று சட்டமாய் பேசினால்
மிச்சம் காணாது

பசை போட்டு ஒட்டிய பேராசைகள் பிணைந்து
இசையும் கசையடியாகும்
அசை போட்டு பார்த்தால் அனைத்தும் மாறிவிடும்
நிலையற்ற தன்மை நெஞ்சம் மறந்துவிடும்
இன்பமும் துன்பமும் ஒன்றே தான்
எதுவும் நிலைப்பதில்லை
சிலையாக நிற்க பழகினால்
விலையாக எதுவும் கொடுக்காமல் வீணாக ஏதும் படிக்காமல்
ஆசைகள் மீறினால் அச்சம் தாக்கும்
ஓரளவுக்கு தேறினால் துச்சம் ஆக்கும்
ஆலமரம் ஆனாலும் புயலுக்கு தாங்காது
அசையும் நாணல் புயலுக்கு நீங்காது
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!
கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
{{comments.comment}}