சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.110த்திற்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளி வருகிறது. தற்போது வரத்து குறைந்துள்ளதால், கடந்த மாதம் கிலோ ரூ.20க்கு விற்கப்பட்ட தக்காளி, புரட்டாசி மாதத்தில் ரூ.40க்கு விற்கப்பட்டது. தற்போது ஆங்காங்கே பெய்து வரும் மழை காரணமாக, தற்போது தக்காளி விலை அதிகரித்து ரூ.110த்திற்கு விற்கப்பட்டு வருகிறது. தற்போது, தக்காளி மட்டும் இன்றி தேங்காய் விலையும் கனிசமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகளிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் தற்போது கடுமையான மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளி உற்பத்தி செய்யும் இடத்திலேயே தக்காளி விலை அதிகரித்திருப்பதால், தற்போது 110த்திற்கு விற்கப்படும் தக்காளி 200 ரூபாய்க்கும் விற்கப்பட வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்
தக்காளி ரூ. 80-110
இஞ்சி 70-200
நெல்லிக்காய் 70-76
பீன்ஸ் 38-150
பீட்ரூட் 14-80
பாகற்காய் 15-30
கத்திரிக்காய் 15-80
பட்டர் பீன்ஸ் 56-85
முட்டைகோஸ் 15-60
குடைமிளகாய் 10-30
கேரட் 30-82
காளிபிளவர் 20-40
சௌசௌ 10-25
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 40-60
பூண்டு 180- 450
பச்சை பட்டாணி 130-160
கருணைக்கிழங்கு 25-50
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 10-20
மாங்காய் 100-180
மரவள்ளி 40-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 25-72
சின்ன வெங்காயம் 25-80
உருளை 30-80
முள்ளங்கி 15-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
முருங்கைக்காய் 30-120
இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 120-260
வாழைப்பழம் 15-110
மாதுளை 120-300
திராட்சை 70-140
மாம்பழம் 30-200
தர்பூசணி 15-40
கிர்ணி பழம் 25-80
கொய்யா 24-100
நெல்லிக்காய் 25-80
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்
ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு
திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்
PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ
'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'...தமிழக அரசு அரசாணை வெளியீடு
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி
{{comments.comment}}