ஓர் இரும்பு கூழானது!

Jul 16, 2026,05:13 PM IST

- பாவலர் மாயோன் மங்கை


காட்டிலும் மேட்டிலும்

வளர்ந்தவன்


கல்லிலும் முள்ளிலும்

நடந்த வன்


வெயிலிலே மெய்யாலே

உழைத்தவன்


வேர்வைமட்டும் உப்பாக்கி உண்டவன்




தாய்மொழி தவறாது

உரைப்பவன்


தவறியும் வேறுமோழி

தடவாதவன்


காடுண்டு கலப்பை

உண்டு


கண் உறங்க நிலம்

உண்டு


போர்த்த இரு கை கொண்டு


போலி இல்லா வாழ்வு

உண்டு


எதற்கும் ஆசை இல்லை


ஏறெடுததும் பார்ப் பதில்லை


ஓர்நாளிலே ஓரவிழிப்

பார்வையிலே


குவியிதழ் சிந்தும் முத்துத் துளியிலே


முனகவிட்ட    முல்லைச்

சரமே


வேர்வை மணம் பிடிக்குமா


வேறுபக்கம்‌ முகம்

திரும்புமா


திரும்பத் திரும்ப என்னைக் கேட்கிறனே


திருவாய் திறந்திடடி


தேக்குமரத் தேகத்திலே

தேர்மேல்மீது  நீ இருக்க


தெக்கத்திக் கள்ளனுக்கு

தெவிட்டாத தேன் கிடைக்க


தென்னைமரத் தோப்பிலே தேவ ராகம்

பாடுகிறேன்


இரும்பைக் கூழாக்கிய

இளந் தென்றலே

பதில் சொல்லேன்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்