பாட்னா : பீகார் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய இரண்டு மணி நேரத்திலேயே தங்களின் வெற்றியை உறுதி செய்துள்ளது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. பெரும்பாலான தொகுதிகளில் பாஜக கூட்டணியே முன்னிலையில் உள்ளதால் எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட்டாவது கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பீகார் சட்டசபையில் உள்ள 243 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. இவற்றில் பதிவான ஓட்டுக்கள் நவம்பர் 14ம் தேதியான இன்று காலை துவங்கி எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலையிலேயே இருந்து வருகிறது. பீகாரில் பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைப்பதற்கு 122 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
ஆனால் காலை 11 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 193 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்தியா கூட்டணி 47 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பீகாரின் அடுத்த முதல்வர் என பிரச்சாரம் செய்யப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், பின்னடைவை சந்தித்து வருகிறார். இதனால் அவரது வெற்றியே கேள்விக்குறியாகி உள்ளது.

இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய 3 மணி நேரத்தில் தொடர்ந்து பாஜக கூட்டணி முன்னிலையில் வகிக்கும் தொகுதிகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக எதிர்க்கட்சிக்கு மிக சொற்ப இடங்கள் மட்டுமே கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. இதனால் இப்போது வெற்றி பெற போவது யார், ஆட்சி அமைக்க போவது யார் என்ற கேள்டிகளுக்கு பதிலாக எதிர்க்கட்சியில் யாரெல்லாம் டெபாசிட் வாங்குவார்கள் என அனைவரும் கேட்க துவங்கி விட்டனர்.
ஓட்டு திருட்டு, எஸ்ஐஆர் உள்ளிட்ட பலவிதமான பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகள் முன் வைத்த போதிலும், அதையும் தாண்டி மக்களின் அமோக ஆதரவு பாஜக கூட்டணிக்கு கிடைத்துள்ளது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பீகார் தேர்தலில் மொத்தமாக எதிர்க்கட்சிகள் துடைத்தெறியப்பட்டுள்ளதால் இனி அடுத்தடுத்த மாநிலங்களில் நடக்க போகும் சட்டசபை தேர்தல்களில் பாஜக.,வின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் மத்திய அரசை எதிர்பார்ப்பது?...சட்டசபையில் முதல்வர் ஆவேசம்
தமிழ்நாட்டில் 6 ராஜ்யசபா காலியிடங்களுக்கு மார்ச் 16ல் தேர்தல்.. யாருக்கெல்லாம் மீண்டும் சீட்?
அரிசியை இலவசமாக கொடுக்கும் அரசு குவார்ட்டர் பாட்டிலை வழங்காதது ஏன்? சீமான் ஆவேசம்!
உதவித்தொகை கேட்டால் தடியடியா?வீதியில் அலைகழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்:எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
தமிழ்நாடு ராஜ்யசபா தேர்தல்... திமுக, அதிமுக கூட்டணிகளை முறைப்படுத்த உதவுமா?
தமிழகத்தில் நாளை மறுநாள் கொட்டப் போகிறது மழை... வார்னிங் கொடுத்த வானிலை மையம்!
மதுரை சித்திரை திருவிழா 2026 எப்போது ? தேதி முழு விபரங்கள் இதோ
தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை: மேயர் பிரியா அறிவிப்பு
{{comments.comment}}