- கவிஞர் க.முருகேஸ்வரி
கொண்டாட்டமாம் கொண்டாட்டம்
குடியரசு கொண்டாட்டம்....
இன்று கோலாகலக் கொண்டாட்டம்...
நம் நாட்டின் தேசத்தலைவர்களாய்...
மயக்கும் மழலைக்கிள்ளைகள்...
மாறுவேடம் பூண்டனர்!

தேசியக் கொடி பறக்கவே..
கொடிப் பாடல் ஒலிக்கவே..
மூவர்ணக் கொடிக்கு
முதல் வணக்கம் செலுத்தினர்.
தாய்நாட்டைக் காக்கவே
தன் இன்னுயிரை ஈந்திய
தலைவர்கள் தியாகம் போற்றினர்!
கொண்டாட்டமாம் கொண்டாட்டம்
குடியரசு கொண்டாட்டம்....
இன்று கோலாகலக் கொண்டாட்டம்...
அழகு குட்டி செல்லங்கள்
ஆடிப்பாடி மகிழ்ந்தனர்!
பாரதியின் பாடலை
பாடிப் பாடி திளைத்தனர்!
இன்ப வெள்ளம் பொங்கிட..
இனிய வாழ்த்து சொல்லியே...
இனிப்பு உண்டு மகிழ்ந்தனர்...
இன்று கோலாகலக் கொண்டாட்டம்!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்
புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு
புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு
இதயம் என்னும் கவிதை...!
குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!
Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்
இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!
பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
{{comments.comment}}