- கவிஞர் க.முருகேஸ்வரி
கொண்டாட்டமாம் கொண்டாட்டம்
குடியரசு கொண்டாட்டம்....
இன்று கோலாகலக் கொண்டாட்டம்...
நம் நாட்டின் தேசத்தலைவர்களாய்...
மயக்கும் மழலைக்கிள்ளைகள்...
மாறுவேடம் பூண்டனர்!

தேசியக் கொடி பறக்கவே..
கொடிப் பாடல் ஒலிக்கவே..
மூவர்ணக் கொடிக்கு
முதல் வணக்கம் செலுத்தினர்.
தாய்நாட்டைக் காக்கவே
தன் இன்னுயிரை ஈந்திய
தலைவர்கள் தியாகம் போற்றினர்!
கொண்டாட்டமாம் கொண்டாட்டம்
குடியரசு கொண்டாட்டம்....
இன்று கோலாகலக் கொண்டாட்டம்...
அழகு குட்டி செல்லங்கள்
ஆடிப்பாடி மகிழ்ந்தனர்!
பாரதியின் பாடலை
பாடிப் பாடி திளைத்தனர்!
இன்ப வெள்ளம் பொங்கிட..
இனிய வாழ்த்து சொல்லியே...
இனிப்பு உண்டு மகிழ்ந்தனர்...
இன்று கோலாகலக் கொண்டாட்டம்!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!
அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
நமது துன்பத்திற்கு நாமே காரணமா?
திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு
ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}