- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
மரபுக்கவிதை என்று ஒன்றுண்டு ...
அக் கவிதைக்கோர் மரபும் உண்டு
யாப்பின் இலக்கணம் பொருந்தியே ...
எழுதிட அது தான் மரபுமே...
இலக்கண விதியோடு
உன் கற்பனை வளமும்...
உணர்ச்சிப் பெருக்கும் கலந்திட்டால்
அது அமிர்தமே...
எழுத்து அசை சீர் தளை அடி தொடை இவற்றோடு...
இனிமையான ஓசை நயம் கூட்டி..
சந்தங்களோடு சிந்து பாடுவதே....
மரபுக் கவிதை என்று ஆகுமே...

எதுகை மோனை வார்த்தைகளோடு..
ஒத்த ஓசை சொற்களையும்
ஒருங்கே கவிதையில் கொண்டு வந்து ...
மரபுக் கவிதை புனைவோமே...
கவிதையின் மரபு காப்போமே...
கவிஞர்கள் நமக்கும் இதில் பொறுப்புண்டு..
இப்படியான கவிதைகள் அதிகம் படைத்தால்
மரபுக் கவிதைக்கு சிறப்புண்டு..,
மரபுக் கவிதை என்று ஒன்று உண்டு ...
கவிதைக்கோர் மரபும் உண்டு...!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!
பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில்.. தெற்கு திசை நோக்கிய ஆலயம்!
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து
முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை
கவிஞர்களின் கனிவான கவனத்திற்கு!
{{comments.comment}}