நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார் அப்பாவு..!

Mar 17, 2025,01:51 PM IST

சென்னை: சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனையடுத்து மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார் அப்பாவு.


தமிழக பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து சனிக்கிழமை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்  வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 17ஆம் தேதி ஆன இன்று  பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதம் இந்த விவாதத்தின் போது உறுப்பினர்களின் கருத்துக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுவார். பின்னர் துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.


இந்நிலையில், இன்று காலை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். கேள்வி நேரம் முடிவடைந்ததும், சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சபாநாயகர் பதவியிலிருந்து அப்பாவுவை நீக்க கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் அளித்திருந்தார்.




இதையடுத்து இன்று அது விவாதத்துக்கு வந்தது. விவாதத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியை நடத்துமாறு கேட்டுக் கொண்ட அப்பாவு அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. இதையடுத்து விவாதம் தொடங்கியது. விவாதத்தின்மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது,  சபாநாயகர் அப்பாவு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். குறிப்பாக சபை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய சபாநாயகர் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் வைத்தார்.


இதற்கு முன்பு இருந்த சபாநாயகர்களை விட இப்போது உள்ள சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படுகிறார். அரசு மீது குற்றம் குறை காண முடியாதவர்கள் சபாநாயகர் மீது குறை சொல்கிறார்கள்.  சபாநாயகர் அப்பாவு ஜனநாயக ரீதியாக செயல்படக் கூடியவர். அவர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அறிந்து நான் வருத்தமடைந்தேன் என்று கூறினார் முதல்வர். அதன்பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.  அதில் தீர்மானம் தோல்வி அடைந்தது. 


இந்த நிலையில் தற்போது டிவிஷன் வாக்கெடுப்புக்கு அதிமுக தரப்பு கோரிக்கை விடுத்தது. இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு டிவிஷன் வாக்கெடுப்பு நடைபெற்றது. டிவிஷன் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் தீர்மானத்துக்கு எதிராக 154 பேரும், ஆதரவாக 63 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் சபாநாயகராக  அப்பாவு இருக்கையில் அமர்ந்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

71வது தேசிய திரைப்பட விருதுகள்.. ஷாருக் கான் சிறந்த நடிகர்.. எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகர்!

news

10 ஆண்டுகளில் முதல் முறையாக... சென்னை மெட்ரோ ரயிலில்... ஜூலை மாதத்தில் 1 கோடி பேர் பயணம்!

news

சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட கவினின் உடல்... நேரில் அஞ்சலி செலுத்த வந்த அரசியல் தலைவர்கள்!

news

எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதத்தால்.. ஓபிஎஸ்ஸை இழக்கும் பாஜக.. ஆட்டம் காணுகிறதா கூட்டணி?

news

6 மாவட்டங்களில் இன்றும்... 8 மாவட்டங்களில் நாளையும்... கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்!

news

கோச்சுக்காதீங்க.. சமாதான முயற்சியில் பாஜக...முடிவில் உறுதியாக இருக்கும் ஓபிஎஸ்.. அடுத்தது என்ன?

news

முதல்வரை சந்திக்க நான் நேரம் கேட்டேனா.. யார் சொன்னது?.. டாக்டர் ராமதாஸ் மறுப்பு

news

பாஜக.,வுடன் கூட்டணியா?.. வாய்ப்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்லை.. வைகோ பளிச் பதில்!

news

எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி.. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்தா?

அதிகம் பார்க்கும் செய்திகள்