நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார் அப்பாவு..!

Mar 17, 2025,01:51 PM IST

சென்னை: சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனையடுத்து மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார் அப்பாவு.


தமிழக பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து சனிக்கிழமை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்  வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 17ஆம் தேதி ஆன இன்று  பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதம் இந்த விவாதத்தின் போது உறுப்பினர்களின் கருத்துக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுவார். பின்னர் துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.


இந்நிலையில், இன்று காலை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். கேள்வி நேரம் முடிவடைந்ததும், சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சபாநாயகர் பதவியிலிருந்து அப்பாவுவை நீக்க கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் அளித்திருந்தார்.




இதையடுத்து இன்று அது விவாதத்துக்கு வந்தது. விவாதத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியை நடத்துமாறு கேட்டுக் கொண்ட அப்பாவு அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. இதையடுத்து விவாதம் தொடங்கியது. விவாதத்தின்மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது,  சபாநாயகர் அப்பாவு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். குறிப்பாக சபை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய சபாநாயகர் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் வைத்தார்.


இதற்கு முன்பு இருந்த சபாநாயகர்களை விட இப்போது உள்ள சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படுகிறார். அரசு மீது குற்றம் குறை காண முடியாதவர்கள் சபாநாயகர் மீது குறை சொல்கிறார்கள்.  சபாநாயகர் அப்பாவு ஜனநாயக ரீதியாக செயல்படக் கூடியவர். அவர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அறிந்து நான் வருத்தமடைந்தேன் என்று கூறினார் முதல்வர். அதன்பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.  அதில் தீர்மானம் தோல்வி அடைந்தது. 


இந்த நிலையில் தற்போது டிவிஷன் வாக்கெடுப்புக்கு அதிமுக தரப்பு கோரிக்கை விடுத்தது. இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு டிவிஷன் வாக்கெடுப்பு நடைபெற்றது. டிவிஷன் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் தீர்மானத்துக்கு எதிராக 154 பேரும், ஆதரவாக 63 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் சபாநாயகராக  அப்பாவு இருக்கையில் அமர்ந்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்: முடிவுக்கு வந்த சகாப்தம்

news

இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்

news

தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?

news

தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!

news

"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

news

அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!

news

மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?

news

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்