காரைக்குடி அண்ணாமலையார் நகர் பகுதியில் அறிவிக்காத மின்வெட்டுகளால் மக்கள் அவதி

Sep 06, 2025,04:33 PM IST

காரைக்குடி : சிவகங்கை  மாவட்ட காரைக்குடியில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.


காரைக்குடியில் அவ்வப்போது பெய்யும் சிறுமழை வெயிலை தணிக்காமல் புழுக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் மின் தேவை வழக்கத்தை விட அதிகமாகிறது. தண்ணீருக்கான மோட்டார் தொடங்கி மின்விசிறி, குளிர்சாதன உபகரணங்கள் வரை அதிகமாக பயன்படுத்த வேண்டியுள்ளது. 


இந்நிலையில் அறிவிக்கப்படாமல் பல இடங்களில் திடீர் மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக காரைக்குடியில் அண்ணாமலையார் நகர், பாரி நகர், நாகம்மை நகர்  பகுதிகளில் அதிகளவில் இந்த மின்வெட்டு இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எப்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள முடியவில்லை என்பதால் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.




மின்வெட்டு ஏற்பட்டு சிறிது நேரத்தில் மின்சாரம் வந்துவிடுகிறது என்றாலும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மின் அழுத்த குறைவால் வீடுகளில் உள்ள குளிரூட்டிகள், மின்விசிறி ஆகியவற்றை இயக்க முடியாமல் அவதிப்படுவதோடு அவை பழுதாகியும் விடுவதாக புகார் எழுகிறது. மின்வெட்டு, மின் அழுத்த குறைவு காரணமாக மக்கள் துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். 


குறிப்பாக முதியோரும், குழந்தைகளும் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். மாதந்தோறும் பராமரிப்பு என்ற பெயரில் ஒரு நாள் முழுவதுமே மின்சார துண்டிப்பு வழக்கமாக நடக்கும் வேளையில் இன்று அந்த மின்துண்டிப்பு தொடர்பான தகவலும் முன்கூட்டியே அறிவிக்கப்படாததால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். இந்த மின் வெட்டு குறித்து முறையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்