புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்

Dec 02, 2025,06:32 PM IST
புதுச்சேரி: விஜய்யின் ரேட் ஷோவிற்கு அனுமதி அளிப்பது சரியானதாக இருக்காது. ஏனென்றால், பெரிய இழப்பு கரூரில் நிகழ்ந்துள்ளது என்று புதுச்சேரி சபாநயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் புதுவையில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டுள்ள நிலையில், இது தொடர்பாக புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 




விஜய்யின் ரேட் ஷோவிற்கு அனுமதி அளிப்பது சரியானதாக இருக்காது. ஏனென்றால், பெரிய இழப்பு கரூரில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புதுவையில் ரோடு ஷோ நடத்த தவெகவினர் அனுமதி கேட்டு வருகின்றனர். தமிழகம் போல புதுவையில் பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலைகள் இல்லை. குறுகிய சிறிய சாலைகள் தான் உள்ளது. 

அதுமட்டுமில்லாமல் அவர்கள் அனுதி கேட்ட சாலை என்பது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம். அதோடு போக்குவரத்து நெரிசலும், நெருக்கடியும் அதிகம். இதனால் புதுவையில் ரோடு ஷோ நடத்துவதை விஜய் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்து அங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம். அதற்கு அரசு அனுமதி வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்