புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்

Dec 02, 2025,06:32 PM IST
புதுச்சேரி: விஜய்யின் ரேட் ஷோவிற்கு அனுமதி அளிப்பது சரியானதாக இருக்காது. ஏனென்றால், பெரிய இழப்பு கரூரில் நிகழ்ந்துள்ளது என்று புதுச்சேரி சபாநயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் புதுவையில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டுள்ள நிலையில், இது தொடர்பாக புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 




விஜய்யின் ரேட் ஷோவிற்கு அனுமதி அளிப்பது சரியானதாக இருக்காது. ஏனென்றால், பெரிய இழப்பு கரூரில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புதுவையில் ரோடு ஷோ நடத்த தவெகவினர் அனுமதி கேட்டு வருகின்றனர். தமிழகம் போல புதுவையில் பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலைகள் இல்லை. குறுகிய சிறிய சாலைகள் தான் உள்ளது. 

அதுமட்டுமில்லாமல் அவர்கள் அனுதி கேட்ட சாலை என்பது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம். அதோடு போக்குவரத்து நெரிசலும், நெருக்கடியும் அதிகம். இதனால் புதுவையில் ரோடு ஷோ நடத்துவதை விஜய் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்து அங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம். அதற்கு அரசு அனுமதி வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்