சென்னையில்.. இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.. பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலேயே!

Sep 10, 2024,10:39 AM IST

சென்னை:   பருவமழை குறைந்ததால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அநேக இடங்களில் வறண்ட வானிலேயே நிலவும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிசா அருகே கரையை கடந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிக பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. பெரும்பாலான பகுதிகளில்  வறண்ட வானிலை நிலவி வந்தது.




இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மழை நிலவரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, பருவமழை தற்போது குறைந்துள்ளது. இதனால் வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் அடுத்த இரண்டு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்.


குறிப்பாக சென்னையில் இன்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் நீலகிரி, வால்பாறை மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் பருவமழை குறைந்தாலும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மழை அச்சமூட்டும் வகையில் இருக்காது என தெரிவித்துள்ளார். 


இது தவிர கேரளாவில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தற்போது பருவமழை குறைந்ததால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு மிகப்பெரிய மழை வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்