பொறாமை என்னும் பொல்லாக்குணம்

Feb 01, 2026,01:05 PM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


கொளுத்தத் தான் நினைக்கிறேன்..

ஆனால் 

அவ்வப்போது கொழுந்து விட்டு எரிகிறது!!!


அடக்கத்தான் நினைக்கிறேன் 

ஆனால் சில நேரங்களில் 

அடங்க‌மறுக்கிறது..




பொசுக்கத்தான் நினைக்கிறேன் 

ஆனால் 

பொசுக்கென்று பொங்கி எழுகிறதே!


என் செய்வேன்....

பல‌ நேரங்களில் வெந்து தணிகிறேன்.....


புரிந்து கொள்ள கொஞ்சம் அவகாசம் தான் தேவைப்படுகிறது.....


வள்ளலார் படி....

வாரியார் கேள்..

புத்தகம் தேடு...

புனித நூல்களில் மூழ்கு...


முடியவில்லையே....

சரி விடு...

அன்பே சிவம் படம் பார்....


நம்மைப் பக்குவமாய் பக்குவப்படுத்தி விட்டதே..

இந்த பொறாமை என்னும்

பொல்லாக் குணம்!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!

news

சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

news

பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்

news

மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்

news

மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?

news

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?

news

புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு

news

தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?

news

சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்