பொறாமை என்னும் பொல்லாக்குணம்

Feb 01, 2026,01:05 PM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


கொளுத்தத் தான் நினைக்கிறேன்..

ஆனால் 

அவ்வப்போது கொழுந்து விட்டு எரிகிறது!!!


அடக்கத்தான் நினைக்கிறேன் 

ஆனால் சில நேரங்களில் 

அடங்க‌மறுக்கிறது..




பொசுக்கத்தான் நினைக்கிறேன் 

ஆனால் 

பொசுக்கென்று பொங்கி எழுகிறதே!


என் செய்வேன்....

பல‌ நேரங்களில் வெந்து தணிகிறேன்.....


புரிந்து கொள்ள கொஞ்சம் அவகாசம் தான் தேவைப்படுகிறது.....


வள்ளலார் படி....

வாரியார் கேள்..

புத்தகம் தேடு...

புனித நூல்களில் மூழ்கு...


முடியவில்லையே....

சரி விடு...

அன்பே சிவம் படம் பார்....


நம்மைப் பக்குவமாய் பக்குவப்படுத்தி விட்டதே..

இந்த பொறாமை என்னும்

பொல்லாக் குணம்!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

news

மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

news

தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி

news

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

news

ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!

news

சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி

news

'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!

news

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

news

முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை

அதிகம் பார்க்கும் செய்திகள்