- மொழிப்பித்தன் இரா.ச.குமார்
கொஞ்சமாய் எதார்த்தம்
நிறைய கற்பனை
தேவைக்கேற்ப வர்ணனை
இவ்வளவே
இந்த
எளிய சமன்பாடே கவிதை...
--
சுருக்கி எழுதுவதிலென்ன
சுவாரஸ்யம்
சற்றே நீளமாக்கு...
--

மாதிரிக்கு ஒன்று
நீள இரவென்பதை
நீளமான இரவெனலாம்...
--
தூறலென எழுது
தோன்றி மறையும் மின்னலை கட்டமை
மழைச் சூழலை விவரி
கருமுகிலென எழுது
இறுதி வரிக்குள்
ஆகாயத்தையே பிளக்கும்
அந்த இடியையும் இறக்கு...
--
அத்தியாயங்களை பத்திகளாக்கு
வார்த்தைகளை
துண்டாடு
சொல்ல வந்ததை
வரிகள் வழி விளக்கு...
--
எதுவும் கவிதையாகலாம்
இங்கே
எந்த சொல் வீண்?
கண்டதை கவிதைக்குள் துருத்து
வார்த்தை செய்
வரி வரியாய் பிரி...
--
விமர்சிக்கப்படுகிறாயா?
நீ அங்கீகரிக்கப்படுகிறாயென பொருள்
விமர்சித்தமைக்கு
நன்றி சொல்
இனி
எழுது எழுது
ஆக
நீயும் கவிஞனே...
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}