- மொழிப்பித்தன் இரா.ச.குமார்
கொஞ்சமாய் எதார்த்தம்
நிறைய கற்பனை
தேவைக்கேற்ப வர்ணனை
இவ்வளவே
இந்த
எளிய சமன்பாடே கவிதை...
--
சுருக்கி எழுதுவதிலென்ன
சுவாரஸ்யம்
சற்றே நீளமாக்கு...
--

மாதிரிக்கு ஒன்று
நீள இரவென்பதை
நீளமான இரவெனலாம்...
--
தூறலென எழுது
தோன்றி மறையும் மின்னலை கட்டமை
மழைச் சூழலை விவரி
கருமுகிலென எழுது
இறுதி வரிக்குள்
ஆகாயத்தையே பிளக்கும்
அந்த இடியையும் இறக்கு...
--
அத்தியாயங்களை பத்திகளாக்கு
வார்த்தைகளை
துண்டாடு
சொல்ல வந்ததை
வரிகள் வழி விளக்கு...
--
எதுவும் கவிதையாகலாம்
இங்கே
எந்த சொல் வீண்?
கண்டதை கவிதைக்குள் துருத்து
வார்த்தை செய்
வரி வரியாய் பிரி...
--
விமர்சிக்கப்படுகிறாயா?
நீ அங்கீகரிக்கப்படுகிறாயென பொருள்
விமர்சித்தமைக்கு
நன்றி சொல்
இனி
எழுது எழுது
ஆக
நீயும் கவிஞனே...
Tamil Short Story: ராசிக்கல்!
எல்லாம் சமம் என்று .. புரட்சிக் கொடி பறக்கணும்!
Poem: ஆத்தோரம் பூத்த கன்னி
செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை!
Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
Tamil Poem: எஞ்சுவதே உன்னதம்!
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
{{comments.comment}}