- மொழிப்பித்தன் இரா.ச.குமார்
கொஞ்சமாய் எதார்த்தம்
நிறைய கற்பனை
தேவைக்கேற்ப வர்ணனை
இவ்வளவே
இந்த
எளிய சமன்பாடே கவிதை...
--
சுருக்கி எழுதுவதிலென்ன
சுவாரஸ்யம்
சற்றே நீளமாக்கு...
--

மாதிரிக்கு ஒன்று
நீள இரவென்பதை
நீளமான இரவெனலாம்...
--
தூறலென எழுது
தோன்றி மறையும் மின்னலை கட்டமை
மழைச் சூழலை விவரி
கருமுகிலென எழுது
இறுதி வரிக்குள்
ஆகாயத்தையே பிளக்கும்
அந்த இடியையும் இறக்கு...
--
அத்தியாயங்களை பத்திகளாக்கு
வார்த்தைகளை
துண்டாடு
சொல்ல வந்ததை
வரிகள் வழி விளக்கு...
--
எதுவும் கவிதையாகலாம்
இங்கே
எந்த சொல் வீண்?
கண்டதை கவிதைக்குள் துருத்து
வார்த்தை செய்
வரி வரியாய் பிரி...
--
விமர்சிக்கப்படுகிறாயா?
நீ அங்கீகரிக்கப்படுகிறாயென பொருள்
விமர்சித்தமைக்கு
நன்றி சொல்
இனி
எழுது எழுது
ஆக
நீயும் கவிஞனே...
The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!
நீயும் கவிஞனே!
வாழ்க்கை எதிர்நீச்சலே!
ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா
மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!
Never feel defeated.. நம்பிக்கை இழக்காமல் ஓடுங்கள்.. வெல்வீர்கள்!
10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்
10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!
{{comments.comment}}