சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

Apr 06, 2026,06:19 PM IST

மதுரை : சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட போலீசார் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.


2020ம் ஆண்டு ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் (59) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோரை ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். 


காவல் நிலையத்தில் போலீசார் கடுமையாக தாக்கியதால் தந்தை-மகன் இருவரும் உயிரிந்தனர். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, இந்த வழக்கு மதுரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.




இந்த வழக்கில் 2026ம் ஆண்டு மார்ச் 23ம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ஆனால் குற்றவாளிகள் 9 பேருக்கான தண்டனை என்ன என்பது குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி கூறி இருந்தார்.


இந்நிலையில் இந்த வழக்கின் தண்டனை விபரங்களை மதுரை நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில். இது மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு. நிரபராதிகள் என தெரிந்தும் இரவு முழுவதும் வைத்து கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். இதில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது. குற்றவாளிகள் நன்கு அறிவு வளர்ச்சி அடைந்தவர்கள். படித்தவர்கள். இது சாதாரண குற்றம் அல்ல. இது போன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியே இல்லை. இது போன்ற வழக்கில் ஆயுள் தண்டனை கொடுத்தால் காவல் துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.


இதனால் இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையும், ரூ.15 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். மற்றவர்களுக்கும் இதேபோல அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை தவிர 7 ஆண்டு, ஒரு ஆண்டு சிறை என கடுமையான தண்டனைகளை மதுரை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Poem: இருமனம் இணைந்த காவியம்

news

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

news

“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?

news

மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!

news

வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!

news

சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!

news

சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!

news

"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு

news

கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்