Destination Maldives.. போவோமா ஊர்கோலம்.. அதுவும் நம்ம பட்ஜெட்டுக்குள்.. மாலத்தீவுக்கு!

Dec 16, 2025,02:37 PM IST

- ப.அகிலா


சேலம்: சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை, மாலத்தீவு என்றாலே அது உலகப் பணக்காரர்கள் மட்டுமே செல்லக்கூடிய ஒரு எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால் இன்று எல்லோரும் செல்ல விரும்பும் ஒரு செல்லத் தீவாக மாறியிருக்கிறது.


தண்ணீருக்கு மேல் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வில்லாக்கள் மற்றும் மக்கள் வசிக்காத தனிப்பட்ட தீவுகளில் (Private Islands) இயங்கிய சொகுசு விடுதிகள் மட்டுமே அந்நாட்டின் அடையாளமாக இருந்தன. நடுத்தர வர்க்கப் பயணிகள் அங்கு செல்வதென்பது வெறும் கனவாக மட்டுமே இருந்தது. சுற்றுலா வருமானம் அனைத்தும் பெரும்பாலும் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கே சென்றடைந்தது, உள்ளூர் மக்களுக்கு இதில் பெரிய பங்கு கிடைக்கவில்லை.


இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் மாலத்தீவின் சுற்றுலாத் துறையில் ஒரு வியக்கத்தக்க மற்றும் அமைதியான புரட்சி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு அரசு கொண்டு வந்த துணிச்சலான சட்டச் சீர்திருத்தங்கள், உள்ளூர் மக்கள் வசிக்கும் தீவுகளிலேயே விருந்தினர் இல்லங்களை (Guest Houses) நடத்த அனுமதி அளித்தன. இது "சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு விடுதிகளில் மட்டுமே தங்க வேண்டும்" என்ற பல கால விதியைத் தகர்த்தெறிந்தது. இதன் மூலம், மாலத்தீவின் அழகை அனுபவிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் பொதுவான ஒன்றாக மாறியது.




தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, மாலத்தீவின் சுமார் 90 தீவுகளில் 1,200-க்கும் மேற்பட்ட விருந்தினர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாற்றத்தினால் பயணிகள் வெறும் கடற்கரை அழகை மட்டும் ரசிக்காமல், மாலத்தீவின் அன்றாட வாழ்க்கை முறை, உணவு மற்றும் கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்க முடிகிறது. மிக முக்கியமாக, நாட்டின் பொருளாதாரத்தை இயக்கும் சுற்றுலாத் துறையின் லாபத்தை, முதல்முறையாக உள்ளூர் குடும்பங்கள் நேரடியாக ஈட்டத் தொடங்கியுள்ளனர். இது ஒரு நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த (Sustainable Tourism) புதிய சுற்றுலா மாதிரியாக உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.


இன்று மாலத்தீவுகள் தனது பிரத்யேகத் தன்மையை இழக்காமல், அதே சமயம் சாமானிய மக்களும் அணுகக்கூடிய ஒரு "மக்களுக்கான சொர்க்கமாக" உருவெடுத்துள்ளது. சுற்றுசூழலைப் பாதுகாப்பதிலும், உள்ளூர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும் இந்த புதிய அணுகுமுறை பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.


என்னங்க மாலத்தீவுக்கு ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாமா??


(ப.அகிலா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை

news

எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!

news

மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!

news

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு

news

மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!

news

தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!

news

மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!

அதிகம் பார்க்கும் செய்திகள்