முதியோரைக் காப்போம்

Jul 09, 2026,02:32 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி


நடைதளர்ந்து உடல் மெலிந்து 

கண்ணொளி குறைந்து நடுக்கம் உணர்ந்து ...

நான்கு சுவருக்குள்ளே நலிந்து கிடந்து ... 

ஊமை உணர்வுகளை உள்ளே புதைத்து  .. 

உருக்குலைந்து கிடக்கும் உயிர்களைக் காப்போம் !


ஓடி ஆடி உழைத்த உடம்பும உள்ளமும் ஓய்வைத் தேடி சற்றே ஓய்ந்து...

நாடி நரம்புகள் சுருண்டு இங்கே...

நற்பேச்சும் குறைந்து பாயில் சரிந்து ...

நடைப் பிணமாய் வாழும் நலிந்தோரைக் காப்போம் !




நம் இளமையில் நம்மைத் தாங்கி...

நமக்காக வறுமையிலும் பல முறை ஏங்கி...

ஊன் உருக உழைத்துத் தேடி...

ஈட்டிய பொருளை இந்தா என்றெடுத்தளித்த...

தன்னிலை அறியாத் தவசிகளைப்  

பெரும் விருட்சமாய் வாழ்ந்த முதியோரைக் காப்போம் !


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்