- செ. சாந்தி சின்னத்தம்பி
நடைதளர்ந்து உடல் மெலிந்து
கண்ணொளி குறைந்து நடுக்கம் உணர்ந்து ...
நான்கு சுவருக்குள்ளே நலிந்து கிடந்து ...
ஊமை உணர்வுகளை உள்ளே புதைத்து ..
உருக்குலைந்து கிடக்கும் உயிர்களைக் காப்போம் !
ஓடி ஆடி உழைத்த உடம்பும உள்ளமும் ஓய்வைத் தேடி சற்றே ஓய்ந்து...
நாடி நரம்புகள் சுருண்டு இங்கே...
நற்பேச்சும் குறைந்து பாயில் சரிந்து ...
நடைப் பிணமாய் வாழும் நலிந்தோரைக் காப்போம் !

நம் இளமையில் நம்மைத் தாங்கி...
நமக்காக வறுமையிலும் பல முறை ஏங்கி...
ஊன் உருக உழைத்துத் தேடி...
ஈட்டிய பொருளை இந்தா என்றெடுத்தளித்த...
தன்னிலை அறியாத் தவசிகளைப்
பெரும் விருட்சமாய் வாழ்ந்த முதியோரைக் காப்போம் !
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிடும்.. மு.க.ஸ்டாலின்
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
Motivational Short Story: சிற்றுயிர்களின் விழிப்புணர்வு மாநாடு
உள்ளபடிக் குடிநீரும் உப்பும் தான் கரிக்குதே!
387 வயசு இளமையான சென்னை.. எத்தனை எத்தனை சிறப்புகள்!
உதவியை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்!
Short Story: ருத்ர தாண்டவம்!
புரியாப் புதிர்!
{{comments.comment}}