முதியோரைக் காப்போம்

Jul 09, 2026,02:32 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி


நடைதளர்ந்து உடல் மெலிந்து 

கண்ணொளி குறைந்து நடுக்கம் உணர்ந்து ...

நான்கு சுவருக்குள்ளே நலிந்து கிடந்து ... 

ஊமை உணர்வுகளை உள்ளே புதைத்து  .. 

உருக்குலைந்து கிடக்கும் உயிர்களைக் காப்போம் !


ஓடி ஆடி உழைத்த உடம்பும உள்ளமும் ஓய்வைத் தேடி சற்றே ஓய்ந்து...

நாடி நரம்புகள் சுருண்டு இங்கே...

நற்பேச்சும் குறைந்து பாயில் சரிந்து ...

நடைப் பிணமாய் வாழும் நலிந்தோரைக் காப்போம் !




நம் இளமையில் நம்மைத் தாங்கி...

நமக்காக வறுமையிலும் பல முறை ஏங்கி...

ஊன் உருக உழைத்துத் தேடி...

ஈட்டிய பொருளை இந்தா என்றெடுத்தளித்த...

தன்னிலை அறியாத் தவசிகளைப்  

பெரும் விருட்சமாய் வாழ்ந்த முதியோரைக் காப்போம் !


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: இந்திய கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

"எம்எல்ஏ.,க்களை வாங்குவதில் மட்டும் கவனம்..." அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

news

CM VIjay to visit Karur: முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?

news

ரூ.2000 நோட்டுக்கள் வைத்திருந்தால் மாற்றிக் கொள்ளலாம் : ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு

news

அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் அதிரடி பதிலடி: அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல்!

news

ADMK Ex MLAs: ராஜினாமா ஏன்? சபாநாயகரிடம் 3 முன்னாள் எம்எல்ஏ.,க்கள் நேரில் விளக்கம்

news

மகளிர் விடியல் பயணம் திட்டம் பெயர் மாற்றம்...அரசு பஸ்களில் விடியல் நீக்கம்

news

அழகுடனே சொலிக்குதடா ஆனந்தமும் கூட!

news

முதியோரைக் காப்போம்

அதிகம் பார்க்கும் செய்திகள்