தேவகோட்டையில்.. கேட்போராக இருந்த குழந்தைகளை வாசிப்போராக மாற்றும் முயற்சி

Jun 25, 2026,03:47 PM IST

தேவகோட்டை: தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் "வாசிப்பு இயக்கம்" திட்டத்தின் கீழ் விலையில்லா கதைப்புத்தகங்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.


நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியை சிவரஞ்சனி வரவேற்புரை வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாசிப்பு இயக்கப் புத்தகங்களை வழங்கினார்.


அப்போது அவர் பேசியதாவது:


“தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை பயிலும் மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கும் நோக்கில் வாசிப்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ‘நுழை’, ‘நட’, ‘ஓடு’, ‘பற’ என்ற நான்கு வாசிப்பு நிலைகளுக்கேற்ப சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதைப்புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.




‘ஒரு கதை – ஒரு புத்தகம் – 16 பக்கங்கள்’ என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல்கள் மாணவர்களின் வயதிற்கும் வாசிப்புத் திறனுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லிக் கொடுத்தோம்; இனி அவர்கள் தாங்களாகவே கதைகளை வாசிக்கும் நிலையை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.


கேட்போராக (Listeners) இருக்கும் குழந்தைகளை வாசிப்போராக (Readers) மாற்றும் அரிய முயற்சியாக வாசிப்பு இயக்கம் திகழ்கிறது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கைகளில் சிறிய கதைப்புத்தகங்களை கொண்டு சேர்த்து அவர்களிடம் சுயவாசிப்பு பழக்கத்தை உருவாக்கும் முன்னோடியான திட்டமாக இது விளங்குகிறது. குழந்தைகள் புத்தகங்களை தொடர்ந்து வாசித்து அறிவை வளர்த்துக் கொண்டு கல்வியிலும், வாசிப்புத் திறனிலும் சிறந்து விளங்க வேண்டும்” என்றார்.


நிகழ்ச்சியின் நிறைவில் ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். வாசிப்பு இயக்கப் புத்தகங்களை பெற்றுக் கொண்ட மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களது வாசிப்பு அனுபவத்தைத் தொடங்க ஆர்வம் தெரிவித்தனர்.


தமிழக அரசின் இந்த முயற்சி மாணவர்களிடையே வாசிப்பு கலாச்சாரத்தை உருவாக்கி, அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்பும் முக்கியமான கல்விப் புரட்சியாக கல்வியாளர்கள் பாராட்டுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!

news

வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!

news

சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!

news

சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!

news

"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு

news

கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

news

Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!

news

அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்

news

"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்