வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது பேச்சுவார்த்தைகள் நன்றாகச் செல்கின்றன என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்கூறியுள்ளார். மேலும், இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இந்தியாவுக்கு வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், வாஷிங்டனுக்கும் டெல்லிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக முன்னேறி வருகின்றன. இரு தரப்பினரும் வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இறுதி செய்ய முயற்சிக்கிறோம்.
அவர் (பிரதமர் மோடி) என் நண்பர், நாங்கள் பேசுகிறோம், அவர் என்னை அங்கே வரச் சொல்கிறார், நாங்கள் அதை ஏற்பாடு செய்வோம், நான் வருவேன். மோடி ஒரு சிறந்த மனிதர். எனது இந்திய வருகை அடுத்த ஆண்டு இருக்கலாம் என்றார் அதிபர் டிரம்ப்.

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மார்ச் 2025 இல் தொடங்கின. இதன் நோக்கம் "நியாயமான, சமநிலையான மற்றும் பரஸ்பரம் நன்மை பயக்கும்" இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை (BTA) எட்டுவதாகும். இரு நாடுகளின் அதிகாரிகளும் இதுவரை ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
அக்டோபர் அல்லது நவம்பர் 2025 க்குள் ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகைக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ட்ரம்பின் கருத்துக்கள் வாஷிங்டனுக்கும் டெல்லிக்கும் இடையிலான ஈடுபாடு ஆழமடைவதற்கான ஒரு சமிக்ஞையாக கருதப்படுகிறது.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், ட்ரம்ப் இந்தியாவிற்கு 50% வரிகளை விதித்தார். ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கியதற்காக 25% அபராதமும் இதில் அடங்கும். அமெரிக்கா இந்தியாவின் அதிக வரிகள் மற்றும் அமெரிக்கப் பொருட்களுக்கான பிற தடைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருவதால், இந்த நடவடிக்கை வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மேலும் கடினமாக்கியது.
சமீபத்திய வாரங்களில், ட்ரம்ப், பிரதமர் மோடி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாகக் குறைப்பதாக உறுதியளித்துள்ளார் என்றும், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார். இருப்பினும், இந்திய அரசாங்கத்திடமிருந்து இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வரவில்லை.
மேலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்கள் 'ஆபரேஷன் சிந்துர்'க்குப் பிறகு அதிகரித்தபோது, அமெரிக்க அதிபரின் தொடர்ச்சியான கூற்றுக்களால் ட்ரம்ப்-மோடி உறவும் பாதிக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு சமரசத்தை ஏற்படுத்தியது நான்தான் என்று தொடர்ந்து கூறி வருகிறார் டிரம்ப். இதை இந்தியா தொடர்ந்து மறுத்தும் வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.
அமெரிக்க அதிபராக கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டிரம்ப் இந்தியா வந்திருந்தார். அவரது முதல் பதவிக்காலத்தில் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
{{comments.comment}}