சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து இறந்த 35 பேருக்கு இன்று கூடிய தமிழக சட்டசபை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு 74 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் நேற்று முதலில் உயிரிழந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து 35ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் என பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை தற்போது அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தற்போது பூதாகரமாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்ததோடு, கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட காவல்துறையின் பலர் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளனர்.கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2000 மேற்பட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் தமிழக சட்டமன்ற சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. குவைத் நாட்டில் தீ விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கும் சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ராசாயனம் கலந்த சாராயம் குடித்த காரணத்தினால், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், துயரமும் கொள்கிறது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். சமூகத்தை பாழ்படுத்திய இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாக தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனே சிகிச்சை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}