சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நிலவி வந்த வெயிலின் தாக்கம் தற்போது குறைந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக மதுரையில் கடந்த ஒரு வாரமாக கடுமையாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று திடீரென வானில் மேகங்கள் திரண்டு நல்ல மழை பெய்தது. அதேபோல் விருதுநகர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று பெய்த மழையால் குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் உள் தமிழக பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று கனமழை:
கோவை, நீலகிரி, திருப்பூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 19 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கன மழை:
கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. நாளை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்!
Operation Sindoor.. பாகிஸ்தானை எப்படி தாக்கினோம்.. விளக்கிய பெண் அதிகாரிகள்.. யார் இவர்கள்?
4 years of DMK Govt: திராவிட மாடல் ஆட்சியே விடியல் தரும் ஆட்சி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இந்திய தாக்குதலில்.. எங்க குடும்பத்துல 10 பேரு செத்துப் போயிட்டாங்க.. மசூத் அஸார் அலறல்!
மங்கள மீனாட்சிக்கு மதுரையில் திருக்கல்யாணம்.. பெண் குழந்தைகளுக்கு வைக்க 31 தமிழ்ப் பெயர்கள்!
ராணுவத்திற்கு ராயல் சல்யூட் அடித்த விஜய்.. இதுதான் இந்தியாவின் முகம்.. பாராட்டிய சிவகார்த்திகேயன்!
இந்தியாவின் 25 நிமிடத் தாக்குதல்.. கொல்லப்பட்ட 70 பயங்கரவாதிகள்.. திரில் நடவடிக்கை!
IPL வரலாற்றில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை.. 3வது முறையாக.. 500+ ரன்களைக் கடந்து புதிய வரலாறு!
சென்னை சூப்பர் கிங்ஸுடன் இன்று மோதல்.. பெரும் வெற்றியைப் பெறும் மும்முரத்தில் KKR!